Tuticorin

News March 21, 2025

தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News March 20, 2025

குஜராத் செல்லும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பொருட்கள்

image

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள தளவாடப் பொருட்களை உடனடியாக அகற்றிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் – டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று (20.03.2025) தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

திருமணமான ஆண்களுக்கான தூத்துக்குடி ஸ்பெஷல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எவ்வாறு மாசி கருவாடு புகழ்பெற்றதோ அதே அளவு தூத்துக்குடி மாசி கருவாடு புகழ்பெற்றது சுவையானது. இங்கு வரிசூரை மீனை பதப்படுத்தி மாசி கருவாடு தயார் செய்கிறார்கள். இதனை குழம்பு, தொக்கு, பொரியல் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். சப்த தாதுக்கள் கொண்டதாக கருதப்படும் இந்த மாசி கருவாடு திருமணமான ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய உணவாகும்.*புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*

News March 20, 2025

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாபெரும் போராட்டம்: JP

image

ஸ்டெர்லைட் ஆலை வேதிப்பொருட்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பல லட்சம் பேர் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என இன்று நெல்லையில்ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜாண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.*உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணவும்*

News March 20, 2025

தூத்துக்குடி முன்னாள் படை வீரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

image

முன்னாள் படை வீரர்கள் நலன் கருதி காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் படை வீரர்கள் சுயதொழில் துவங்க வங்கிகள் மூலம் ரூபாய் 1 கோடி வரை கடன் பெற வழிவகை செய்யப்படும். இதில் 30% மானியம், 0.3% வட்டி மானியம். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். *தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*

News March 20, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு 94 ஓட்டுநர் உடன் நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.*நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News March 20, 2025

கோவில்பட்டியில் ‘உலக சிட்டுக் குருவிகள் தின விழா’

image

மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்கம் சார்பில், தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் பறவைகளுக்கு நவதானியம், தண்ணீர் வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

News March 20, 2025

இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News March 19, 2025

இந்த ஊரில் மது அருந்த வாய்ப்பில்லை

image

திருச்செந்தூர் அருகே உள்ளது காயல்பட்டினம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. நகராட்சி அந்தஸ்து பெற்ற இந்த ஊரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த ஊரில் மருந்துக்கு கூட மதுக்கடைகள் கிடையாது. மதுக்கடைகள் மட்டுமல்ல 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த நகராட்சியில் காவல் நிலையமும் இல்லை, இந்த செய்தியை தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

குலசை ராக்கெட் ஏவுதளத்தில் வேலை; அரசின் பதில் 

image

குலசேகரன்பட்டினத்தில் வரவுள்ள புதிய ராக்கெட் ஏவு தளத்தில் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இதில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும்போது உள்ளூர் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்படலாம் என பதில் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க 

error: Content is protected !!