Tuticorin

News April 1, 2025

தூத்துக்குடி மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார். மீனவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குறிகளை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 1, 2025

கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி – கலெக்டர் அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி  வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

தூத்துக்குடி:பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் விநாயகர் கோயில்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகருக்கு தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கிய கோயில்களில் ஒன்று, இக்கோயிலில் திருவிழாவும் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் இழுபறி, அடிக்கடி உடல்நலக் குறைவு, திருமணத் தடை, படிப்பில் குறைபாடு, பணப்பிரச்சனைகள் இருந்தால், இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் காரியம் சிறப்பாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News April 1, 2025

தூத்துக்குடியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ரயில் பெட்டியின் கீழ் ஆண் சடலம்

image

நேற்று முன்தினம் நாகர்கோயிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில் நின்ற போது, பொது பெட்டியின் கீழ் 40 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து கோவில்பட்டி வி.ஏ.ஓ கவிதா தூத்துக்குடி ரயில்வே போலீஸில் புகார் தெரிவிக்க,போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.இறந்தவரின் உடலில் தீக்காயம் இருந்துள்ள நிலையில் போலீசார் இறப்பிற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

News April 1, 2025

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News March 31, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக மோசடிகள் பெருகி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை இன்று (மார்ச்.31) விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பண ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதை தவிர்ப்பீர்; உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவீர்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*

News March 31, 2025

தூத்துக்குடி : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் விவசாயிகளின் நிலஉடைமை விவரங்கள் கிராமங்கள் தோறும் கட்டணமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன்  இணைக்கப்பட்ட கைபேசி, பட்டா நகளுடன் அணைத்து பொதுசேவை மையத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குள்  பதிவு செய்யவேண்டுமென வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

தூத்துக்குடியில் வாலிபரை கொலை செய்த இருவர் கைது

image

கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் சங்கிலிபாண்டி இன்று மாலை காரை விட்டு மோதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை செய்த காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவரின் மகன் சண்முகராஜ், வெள்ளபாண்டி என்பவரின் மகன் மகாராஜன் ஆகிய இருவரை சப்இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

News March 31, 2025

தூத்துக்குடியில் ஆயிரம் கால் பள்ளிவாசல்; தெரியுமா?

image

காயல்பட்டினத்தில் ஆயிரம் கால் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பெரிய குத்பா பள்ளிவாசல் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் கி.பி. 842 இல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆயிரம் தூண்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு முறை இந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை சிறப்பு வாய்ந்தது. *புது தகவல்னா ஷேர் பன்னவும்

error: Content is protected !!