India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(அக்.07) தனது முகநூல் பக்கத்தில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான பணியன்களையோ சாதி தலைவர்களின் வேடங்களை அணிந்து வரக்கூடாது. அதேபோல் உலோகத்தில் ஆன வாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. மேலும், தசரா குழுவினர் பக்தி பாடல்களை தவிர ஜாதி ரீதியான பாடல்களை இசைத்து நடனமிடக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.
கயத்தாறில் நேற்று(அக்.06) நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, திமுகவில் பிறப்பால் பதவி கிடைக்கிறது. ஆனால் அதிமுகவில் உழைப்பால் பதவி கிடைக்கிறது. இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம். செந்தில் பாலாஜி மிகவும் கெட்டிக்காரர். திமுக அவர் கையில் தான் உள்ளது என்றார்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முத்தாரம்மன் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் அறங்காவல் குழு தலைவர் கண்ணன் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.
விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாயிகள் சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை பயிர் சாகுபடி செய்தனர். இவைகளுக்கு அடி உரமாக போடப்படும் டிஏபி உரம் ஒடிசாவில் இருந்து 600 டன்னும், ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து 300 டன்னும் பெறப்பட்டு 72 கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
தூத்துக்குடியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனின் பெயருக்கு பின்னால் இ.ஆ.ப (IAS) என பொறிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ், ஆர்பி, டிஆர்பி ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் கட்டணமில்லா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த வகுப்புகள் வரும் 9ஆம் தேதி துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என் அலார்ட் என்ற தமிழ் வானிலை அறிவிப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வானிலை முன்னறிவிப்பு, தினசரி மழை அளவு, நீர் தேக்கம் போன்றவைகளும், பேரிடர் காலத்திற்கு புகார்களையும் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம் என்றும் இதனை கூகுள் பிளே ஸ்டோரில் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (அக்.4) தனது முகநூல் பக்கத்தில்; சென்னை மெட்ரோ 2ம் கட்ட நிதிக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழக முதல்வரின் டெல்லி பயணத்தின் போது இந்த நிதியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக மனமார்ந்த நன்றி. அவரது தலைமையின் கீழ் சென்னையை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்த மைல்கல் குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.