Tuticorin

News April 11, 2025

நலவாழ்வு மையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை 

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் விழாவில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி, கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் இளம்பகவத் உடனிருந்தனர்.

News April 10, 2025

பல்லாக்கு கட்டிடம் கனிமொழி எம்.பி. திறப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

News April 10, 2025

சாத்தான்குளம் மாணவி தமிழக அளவில் சாதனை

image

சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிதியா என்பவர் தற்போது வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய Group 1 தேர்வு முடிவில் தமிழகத்தில் 4வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு துணை ஆட்சியர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News April 10, 2025

தனியார் பள்ளி ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடியில் உள்ள ஜி.யு போப் கல்லூரியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்.12 அன்று காலை 9 – 2.30 மணி வரை நடைபெற உள்ளது. 14 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் இம்முகாமில் பி.எட் அல்லாத, முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 10, 2025

தூத்துக்குடி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 10, 2025

லாரி மீது டூவிலர் மோதியதில் தபால் அதிகாரி உயிரிழப்பு

image

எட்டயபுரம் அருகே எத்திலிப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் எட்டயபுரம் தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நிமித்தமாக கோவில்பட்டியில் இருந்து பேரிசோவன்பட்டிக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தலக்கரை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவரது டூவிலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிவக்குமார் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2025

தமிழில் பெயர் பலகை ஆலோசனை கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பல வைப்பது சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

News April 9, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 9, 2025

61 மனுக்கள் நடவடிக்கைக்கு எஸ் பி உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 61 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த எஸ்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

News April 9, 2025

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கில் உத்தரவு

image

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் சாட்சிகளின் வாக்குமூலம், குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவனங்களை மனுதாரர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!