Tuticorin

News July 7, 2025

கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*

News July 6, 2025

திருச்செந்தூர் முருக பக்தர்களே இச்செய்தி உங்களுக்குத்தான்…

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை (ஜூலை 7) காலை 6:15 – 6:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த புனித நீர் ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். அதன்பிறகு 8000 ச.அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட யாகசாலையில் 400 கும்பங்களுடன் பூஜைகள் நடைபெறுகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்படும். 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

News July 6, 2025

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜூலை 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்று, காலை 8.30 – 3 மணி வரை St. மரியன்னை கல்லூரியில் நடைபெறு கிறது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இம்முகாமில் பங்குபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து கொள்ளவும். இதனை தெரியாதோர் தெரிந்துகொள்ள பலருக்கும் SHARE செய்யவும்.

News July 6, 2025

தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

image

சென்னை-தூத்துக்குடிக்கு இன்று காலை 10:10 மணிக்கு 65 பயணிகள் உட்பட 70 பேருடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், ஓடுபாதையில் செல்லும்போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானியின் உரிய நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர். கோளாறு சரிசெய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

குடமுழுக்கு 40 எல்இடி, 40,000 அடி பிரம்மாண்ட மேடை

image

திருச்செந்தூர் கும்பாபிஷேத்தை முன்னிட்டு 40 எல்இடி டிவி மற்றும் 40 ஆயிரம் சதுர அடி பிரம்மாண்ட மேடை கோவில் நிர்வாகத்தால் அமைக்கபட்டு வருகிறது. அந்த பிரம்மாண்ட மேடையில் பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யபட்டு வருகிறது. மேலும் பலர் இந்த கோவில் கும்பாபிஷேத்தில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 40 எல்.இ.டி டிவி கோவில் சார்பில் வைக்கபட்டுள்ளது .

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தூத்துக்குடி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News July 5, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

தூத்துக்குடி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். *உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க*

News July 5, 2025

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற ஜுலை 7ம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது மதுரை, விருதுநகர், நெல்லை தென்காசி வழியாக வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 5, 2025

தூத்துக்குடியில் பெண் கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

image

வாழவல்லானை சேர்ந்த திருமால் மனைவி தனலட்சுமி. இவருக்கும் சோமசுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி சோமசுந்தரத்திடம் 11 பவுன் நகை, 2 லட்சம் கொடுத்துள்ளார். இதை திருப்பி கேட்டதால் கடந்த 2014ல் குலசேகரப்பட்டினத்தில் உள்ள தோட்டத்தில் சோமசுந்தரம், நண்பர் அருண்குமாரும் தனலட்சுமியை கொலை செய்தனர். இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!