Tuticorin

News March 31, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக மோசடிகள் பெருகி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை இன்று (மார்ச்.31) விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பண ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதை தவிர்ப்பீர்; உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவீர்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*

News March 31, 2025

தூத்துக்குடி : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் விவசாயிகளின் நிலஉடைமை விவரங்கள் கிராமங்கள் தோறும் கட்டணமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன்  இணைக்கப்பட்ட கைபேசி, பட்டா நகளுடன் அணைத்து பொதுசேவை மையத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குள்  பதிவு செய்யவேண்டுமென வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

தூத்துக்குடியில் வாலிபரை கொலை செய்த இருவர் கைது

image

கயத்தாறு அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் சங்கிலிபாண்டி இன்று மாலை காரை விட்டு மோதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கொலை செய்த காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி என்பவரின் மகன் சண்முகராஜ், வெள்ளபாண்டி என்பவரின் மகன் மகாராஜன் ஆகிய இருவரை சப்இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். 

News March 31, 2025

தூத்துக்குடியில் ஆயிரம் கால் பள்ளிவாசல்; தெரியுமா?

image

காயல்பட்டினத்தில் ஆயிரம் கால் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பெரிய குத்பா பள்ளிவாசல் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் கி.பி. 842 இல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆயிரம் தூண்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு முறை இந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை சிறப்பு வாய்ந்தது. *புது தகவல்னா ஷேர் பன்னவும்

News March 31, 2025

சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயங்குகின்றன

image

ஆயில் நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை கண்டித்து சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் கடந்த 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தூத்துக்குடியில் ஏராளமான டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இன்று டேங்கர் லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

News March 31, 2025

புத்தொழில் களம் கனிமொழி எம்பி அழைப்பு

image

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் “புத்தொழில் களம்” என்ற நிகழ்ச்சி ஏப்ரல் 5-ல் நடைபெற உள்ளது. இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*

News March 31, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

கோவில்களில் நகைகள் திருடியவர் கைது

image

கயத்தாறு அருகே கோனார்கோட்டை அம்மன் கோவிலில் கடந்த மாதம் நள்ளிரவில் அம்மன் கழுத்தில் இருந்த 16 கிராம் பொட்டுத்தாலி திருடப்பட்டது. அடுத்த சில நாட்களில் திருமங்களக்குறிச்சி கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், துர்கை கோவில்களில் 1 பவுன் மதிப்புள்ள 8 பொட்டுதாலிகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நெல்லையை சேர்ந்த இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்து 21 கிராம் பொட்டுதாலிகளை மீட்டனர்.

News March 31, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்

News March 30, 2025

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நோய் தீர்க்கும் ஆலயம்

image

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி பூவனகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளை தாண்டி பழமையான இந்த கோயிலில் கிழக்குப் பார்த்தபடி மூலவர் காட்சி தருகின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்தியர் தீர்த்தம் இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. இந்த ஆலயத்தில் வேண்டினால் பக்தர்களுக்கு தீராத நோயும், குறைவில்லா குழந்தை பேரும், நல்ல மண வாழ்க்கையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

error: Content is protected !!