Tuticorin

News November 5, 2024

தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் நேற்று வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அண்ணாநகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகேஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 5, 2024

சூரசம்ஹாரத்திற்கு செல்ல வரைபடம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2 யாகசாலை பூஜையுடன் துவங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவ.7 ல் சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. அதற்காக எந்தெந்த ஊர்களில் இருந்து எந்த வழியாக கோவிலுக்கு வர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வரைபடம் வெளியிட்டுள்ளார்.

News November 5, 2024

தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

image

இணையதளங்களில் பகுதி நேர வேலை, ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளங்கள், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் பணத்தை இழந்துவிடக் கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 5, 2024

தூத்துக்குடி ஹாக்கி வீராங்கனைகள் தேர்வு

image

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லையில் வைத்து இம்மாதம் 9 முதல் 12 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட அணிக்கு வீராங்கனைகள் தேர்வு கோவில்பட்டி காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து நவ.9ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

தூத்துக்குடி மாவட்ட சீர்மரபினருக்கு அறிவிப்பு

image

தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருக்கு வரவேற்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த கள ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த குழு தூத்துக்குடிக்கு இன்று வந்தது. தூத்துக்குடி வந்த சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வரவேற்றார்.

News November 4, 2024

தூத்துக்குடி விமான நிலையத் அதிகாரிக்கு ஜனாதிபதி பாராட்டு

image

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 50 பெண் சாதனையாளர்கள், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதியை இன்று நேரில் சந்தித்தனர். இதில், தூத்துக்குடி விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு மேலாளர் எம்.ராஜலட்சுமி உட்பட பெண் சாதனையாளர்களை குடியரசு தலைவர் பாராட்டி அவர்களுக்கு விருந்து அளித்தார்.

News November 4, 2024

ஹிந்தி சர்ச்சை; தூத்துக்குடி அமைச்சர் விளக்கம்

image

மகளிர் உதவி மைய பணியிடங்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. இது சர்ச்சையானநிலையில், இதுகுறித்து, அமைச்சர் கீதா ஜீவன் இன்று விளக்கம் கொடுத்தார். அதில், “மகளிர் உதவி மையப் பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. அதனை திருத்தம் செய்யப்பட்டு தமிழ் ஆங்கிலம் என விளம்பரம் வெளியிடப்பட்டது” என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

News November 4, 2024

திருச்செந்தூரில் உதவி மையங்கள் அமைப்பு

image

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 4 காவல் உதவிமையங்கள் (MayIHelpYou), 4 இடங்களில் அவசரமருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது . தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNSDRF) தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

திருச்செந்தூரில் 4500 போலீசார் பாதுகாப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா (நவ02) துவங்கிய நிலையில், 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான (நவ07) சூரசம்ஹாரம் நிகழ்விற்கு 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கோவில்வளாகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!