India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்தச் சென்றபோது உடற்கல்வி ஆசிரியர் மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த பெற்றோர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மேலும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி இருந்த நிலையில், கோவையில் குற்றவாளியை அவரது உறவினர் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்தச் சென்றபோது உடற்கல்வி ஆசிரியர் மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த பெற்றோர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மாணவிகளிடம் விசாரித்து வருகின்றார். மேலும், குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகை தேர்வு மற்றும் மாநில ஊரக மாணவர்கள் திறனாய்வு தேர்வு ஆகியவற்றை கையாளுவதற்கான ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட படிக்கத் தெரியாத 8,077 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு 850 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு நேற்று(நவ.,10) எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் நேற்று(நவ.,10) திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 13 ரேசன் அரிசி மாவு மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட 3 ரேசன் அரிசி மூட்டைகளும் இருப்பதை கண்டனர். இது தொடர்பாக ராமமூர்த்தி முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சுரேஷ் என்பவர், சில தினங்களுக்கு முன்பு கதிர்வேல் நகரில் வசித்து வரும் பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக நகர காவல் துணை கண்காணிப்பாளர் மதன் விசாரணை நடத்தி சிப்காட் போலீசில் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து SP ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் இன்று(நவ.10) இரவு ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் மகாராஜா, நேற்று முன்தினம் இவர் தனது வீட்டில் வைத்து நண்பர் மாரிமுத்து உடன் மது அருந்தியுள்ளார், அதன் பின் இருவரும் காணாமல் போய்விட்டனர். இந்நிலையில் இன்று(நவ.10)ஜாகிர் உசேன் நகரில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார், இதனையடுத்து போலீசார் மகாராஜாவை முறப்பநாட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் மது போதையில் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒத்துக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் டெல்லி கணேஷ். நேற்று இவர் சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது சொந்த பெயர் கணேஷ். இவர் டெல்லியில் விமானப்படையில் பணியாற்றியதால் அங்கு உள்ள நாடக சபாவில் பயிற்சி பெற்றதாலும் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான பொழுது டெல்லி கணேஷ் என்று அழைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டப்படி கிராமப்புற ஊராட்சிகளில் தொழில் மேம்படுத்தும் விதமாக 176 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் மானியத்துடன் ரூபாய் 1.73 கோடி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் இவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.