Tuticorin

News November 13, 2024

எட்டயபுரத்தில் துணை முதல்வருக்கு வரவேற்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் செய்ய துணை முதல்வர் உதயநிதி இன்று மாலை 6 மணிக்கு மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வருகிறார். அங்கு நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

தூத்துக்குடி சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,“சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் இணையதளம் மோசடிகளை தவிர்க்கும் வகையில் எப்போதும் தங்கள் இணைய வழி தொடர்பில் வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடவுச்சொல்லை மாற்றியமைக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது

News November 12, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விபரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

News November 12, 2024

தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்த பணியானது கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் இணைத்தல் ஆகியவைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

தூத்துக்குடி வரும் துணை CM: அமைச்சர் அறிவுறுத்தல்

image

துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன்முதலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நாளை(நவ.,13) தூத்துக்குடி வருகை தரவுள்ளார். இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர்கள் திரளாக கலந்துகொள்ள அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 12, 2024

தூத்துக்குடி அருகே அரசு அதிகாரி வீட்டில் திருட்டு!

image

தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார். உதவி வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இரவு திரும்பியபோது, இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.20,000 திருட்டு போயிருந்தது. இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 12, 2024

தூத்துக்குடி வருகிறார் துணை CM உதயநிதி ஸ்டாலின்

image

துணை முதல்வரான பின், உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக நாளை(நவ.,13) தூத்துக்குடி வருகிறார். இதை தொடர்ந்து அவருக்கு நாளை மாலை புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்றும், இதில் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணியினர் என திரளாக கலந்துகொள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 11, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ11) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில்குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளைதொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

image

“இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

News November 11, 2024

தூத்துக்குடிதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் வரும் 15ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, பட்டயம், ஐடிஐ படித்த வேலையில்லாத இளைஞர்கள் பங்கேற்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!