Tuticorin

News July 8, 2025

தாலி பாக்கியம் நிலைக்க இங்கே வழிபடுங்கள்

image

தசராவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அருகே, வட கரூரில் உள்ள காரைக்கால் அம்மையார் கல் மண்டப கோவில் அமைந்துள்ளது. அம்மையார் ஈசனிடம் பேய் உருவம் வேண்டியது இந்த ஸ்தலத்தில் என்பது ஐதீகம். காரைக்காலில் நடப்பது போல இங்கும் ஆனி மாதம் நடைபெறும்ஆனி மாத மாங்கனி திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என நம்பப்படுகிறது.

News July 8, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை-14-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்

News July 8, 2025

உடன்குடி அனல் மின் நிலையத்தில் காலிப் பணியிடங்கள்

image

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு 96886 53470 என்ற எண்ணை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். *வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*

News July 8, 2025

தூத்துக்குடி பாஜக அலுவலகத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

தூத்துக்குடி சங்கரப்பேரி ரோட்டில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் உரிய வரி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், முறைகேடாக இயங்கிய குடிநீர் இணைப்பை அதிகாரிகள் நேற்று (ஜூலை.07) துண்டித்தனர். வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News July 8, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100ஐ தொடர்பு கொள்ளலாம்,

News July 7, 2025

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் – நன்றி தெரிவித்த எம்.பி

image

தூத்துக்குடி எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக நடத்த வழி காட்டிய அமைச்சர்களான சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

News July 7, 2025

திருச்செந்தூர்: பிற்பகல் 2 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்க உள்ளனர்.

News July 7, 2025

தூத்துக்குடி: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

image

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தூத்துக்குடிக்கு 77 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974683>>மேலும் அறிய<<>>

News July 7, 2025

தூத்துக்குடி: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

image

தூத்துக்குடி, 77 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

News July 7, 2025

கழுகு பார்வையில் திருச்செந்தூர் முருகன் கோவில்

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று இரவே வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கோவில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் பக்தர்களின் அலைகளால் காட்சியளிக்கின்றன. இதோ திருச்செந்தூர் கும்பாபிஷேக நன்னீராட்டு விழா கழுகு பார்வை புகைப்படம். *SHARE IT*

error: Content is protected !!