Tuticorin

News April 12, 2025

தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 12, 2025

தூத்துக்குடியில் சமையல் உதவியாளர் பணி

image

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. ஊதியமாக ரூ.3,000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப். 29க்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News April 12, 2025

விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ.1.14கோடி நஷ்ட ஈடு

image

தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர் நான்காம் கேட் அருகே டூவிலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரி கார் உரிமையாளர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் மீது துரைசிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரருக்கு ரூ.1,14,06,486 நஷ்ட தொகை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News April 12, 2025

சைபர் குற்றங்கள் காவல்துறை விழிப்புணர்வு

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிவிப்பில்; அடையாளம் தெரியாத அழைப்புகள் மூலம் வரும் உடனடி கடன் என்று கூறும் லிங்க் மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது எனவும் இத்தகைய சைபர் குற்றங்களில் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 12, 2025

தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீஸ் எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2025

திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

image

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

News April 11, 2025

BREAKING  அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக முதல்வரின் தங்கையுமான கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 

News April 11, 2025

தூத்துக்குடியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஏப்.17 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 14 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் மாதம் ஊதியமாக ரூ.15,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 11, 2025

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாட்ஷா என்பவரது வீட்டில் மொட்டை மாடியில் செட் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்முகபுரத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும், இதில் பரூக் என்ற 13 வயது சிறுவன் காயமடைந்தார். இது குறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுரை

image

சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பகிர்ந்துள்ளது. இரவு நேரங்களில் மற்றொரு வாகனத்தை முந்தும்போது அல்லது நாம் செல்லும் வழித்தடத்தில் (Lane) இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறும்போது சரியான திசையில் இண்டிக்கேட்டரை (Indicator) ஒளிரச் செய்ய வேண்டும் என்றும், இது நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் விபத்து ஏற்படாமல் தவிர்த்திடும் என்று குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!