India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக படக்குகளுக்கு எல்பிஜி மோட்டரை தமிழக அரசின் சார்பில் இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இதனை முன்னிட்டு தென் மாவட்டங்களில் உள்ள 150 மிதவை படகுகளுக்கு எல்பிஜி மோட்டார்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் பெருமாள் சாமியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் வாரம்தோறும் மண்டல வாரியாக பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தெற்கு மண்டல அலுவலகத்தில் நாளை(நவ.,28) நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை ஆய்வு செய்தவர், காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், காவல் நிலைய வளாகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வதற்கு பாடுபட்டவர்களுக்கு அரசு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெற தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர்கள் தக்க ஆதாரத்துடன் வரும் 28 ஆம் தேதிக்குள் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்கு செல்பவர்களாகவும்,சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தமிழகமும், திமுகவும் எப்போதும் நமது மக்களின் பிரச்னைகளுக்காகவே நிற்கின்றன. நமது இதயங்களுக்கு நெருக்கமான பண்டிகையான பொங்கல் அன்று CA தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தேன். தற்போது 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்கு தேர்வு தேதி மாற்றப்பட்டு இருக்கிறது என தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை ,பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்த 422 மனுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அளித்த 18 மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு நவ.27 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.