India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு அன்று இந்துக்கள் முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய சிறந்த கோயில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் விநாயகர் கோயில் என்ற பெருமையை பெற்ற இக்கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் இருக்காது என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ஷீலா ஸ்டீபன் தெரிவித்துள்ளார். கோடைகால பயிற்சியில் விளையாட்டுக்களான தடகளம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து போன்ற பயிற்சிகள் வருகிற மே 1 முதல் 16 தேதி வரை நடைபெற உள்ளது. காலை, மாலை என இரு வேளை நடைபெற உள்ளது. தொடர்புக்கு 95787 83632 அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இப்ராஹிம் நடுநிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் டாக்டர் ரகுமான் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கு அடுத்தது என்ன படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்? என்பது குறித்த சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. *மேற்படிப்பு செல்லும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்* *ஷேர் பண்ணுங்க*
தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் டேவிஸ்புரம் பகுதியில் பணிப்படை போலீசார் திடீரென வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 49 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார். அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில், கிறிஸ்தவ பண்டிகை காலங்களில் செய்யும் ஒரு இனிப்பு பதார்த்தம் தான் வாழைப்பழ அல்வா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்த வாழைப்பழ அல்வா, நாட்டு வாழை, முந்திரி, நாட்டுச்சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. எவ்வித வேதிப்பொருள் கலக்காமல் தயாரிக்கப்படும் இந்த அல்வாவை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். நீங்கள் சுவைத்ததுண்டா?
கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைவிற்கு நாள் கூட்டம் ஏப்.17 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வஉசி துறைமுகம் நடப்பு ஆண்டில் ( 2024 – 25 ) 2635 காற்றாலை பிளேடுகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே வேளையில் 2030 காற்றாலை பிளேடுகளை மட்டுமே கையாளப்பட்டிருந்தன. தற்போது முந்தைய ஆண்டை விட 29.80% காற்றாலை பிளேடுகளை கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடலைமாட சுவாமியை காவல் தெய்வமாக கொண்டு வழிபடுபவர்கள் தென் மாவட்டங்களில் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் ஆறுமுகமங்கலம் ஹைகோர்ட் மகாராஜா சுடலைமாட சுவாமி கோவில் .இவர் சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாக பிறந்தவர் என்று கூறப்படுகிறது. பார்வதிதேவி கைலாயத்தில் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் விளக்கின் சுடரில் இருந்து வரும் வெளிச்சத்தில் பிறந்ததால் சுடலைமாடன் என்ற பெயரை கொண்டார்.
Sorry, no posts matched your criteria.