Tuticorin

News November 29, 2024

மாணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு

image

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் அந்தப் பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து அந்த மாணவரை தேடி வருகின்றனர்.

News November 29, 2024

மீனவர்கள் விடுதலை: மத்திய அமைச்சருக்கு கனிமொழி MP நன்றி

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி நேற்று(நவ.,28) தனது முகநூல் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

News November 28, 2024

இன்று இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News November 28, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் 

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிச.3 அன்று மாற்றத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாதாந்திர உதவித்தொகை, வட்டியில்லா வீட்டுக்கடன், கல்வி மற்றும் திருமணஉ தவித்தொகை உள்ளிட்ட உதவிகளுக்கு தேவையான தேசியஅ டையாள அட்டை, ஆதார்அட்டை,  குடும்பஅட்டை, வங்கிபாஸ்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இளம்பகவத் கேட்டுகொண்டுள்ளார்.

News November 28, 2024

மாரிசெல்வராஜ் பட கதாநாயகன் தவெக வில் ஐக்கியம்

image

ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் கிராமத்தில் உள்ள 200 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வெற்றி கழகத்தில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான வாழை படத்தின் கதாநாயகன் பொன்வேல் என்ற சிறுவனும் இணைந்து கொண்டான். இந்த கிராமம் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊர் ஆகும்.

News November 28, 2024

111 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி SP

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பேர் தேர்வு பெற்றனர். இதில் 39 பேருக்கு சென்னையில் தமிழக முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். மீதமுள்ள 111 பேருக்கு நேற்று(நவ.,27) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணைகளை எஸ்பி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்

News November 28, 2024

தூத்துக்குடி விமான நிலையம் வாகன நுழைவுக் கட்டணம் ரத்து!

image

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது நியாயமற்றது என சமூக ஆர்வலர் சங்கர் என்பவர் விமான நிலைய அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது பயணிகளை இறக்கிவிட வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார். பார்க்கிங்கிற்கு கட்டணம் உண்டு.

News November 28, 2024

111 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி SP

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பேர் தேர்வு பெற்றனர். இதில் 39 பேருக்கு சென்னையில் தமிழக முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். மீதமுள்ள 111 பேருக்கு நேற்று(நவ.,27) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணைகளை எஸ்பி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்

News November 28, 2024

தூத்துக்குடியில் வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 63 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன. அதன்படி நவ.,30 அன்று நடைபெற உள்ள இந்த ஏலத்தில் பங்கேற்கும் நபர்கள் ரூ.1000  முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 75983 23680 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். SHARE IT.

News November 27, 2024

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் வழக்கினை அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!