India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் தமிழக அரசால் நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்குகொள்கிறார்கள் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி, காயல்பட்டினம், பெருங்குளம், சாத்தான்குளம், புதூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். களிமண் போன்ற இயற்கை சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதி உள்ளது. பிளாஸ்டிக், தெர்மாகோல், நச்சு சாயங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. வைக்கோல் பொருட்கள் மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் ஆகஸ்ட் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு சிறுபான்மையினர் பிரதிநிதிகளை சந்தித்து அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. <
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு ஏஐடியுசி அகில இந்திய தலைவர் சங்கர் பேட்டியளித்தார். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மக்களே, வரதட்சணை தடைச் சட்டம், 1961ன்படி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையின் பரிந்துரையின் பேரில், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களை இவர்கள் விசாரிக்கின்றனர். நீங்கள் வரதட்சணையால் பாதிக்கப்பட்டிருந்தால் இலவச செல்போன் எண்ணான 181 அல்லது 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவுங்கள்*
தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
தூத்துக்குடி மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<
Sorry, no posts matched your criteria.