Tiruvannamalai

News October 26, 2024

சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பு  

image

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் அணைக்கு தொடர்ந்து 6000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் தற்போது 113.50 அடி நீர் நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் இதனால் சாத்தனூர் அணை சுற்றியுள்ள 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்

News October 26, 2024

தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.

image

திருவண்ணாமலை அருகே பெரியகோளாப்பாடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள 103 காலி மனைகள் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளன. புதிய தொழில் தொடங்க விரும்புவோர் சிட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மனைகளை பார்வையிட அல்லது விவரங்களை பெற, திருவண்ணாமலை சிட்கோ கிளை அலுவலகம் அல்லது கிளை மேலாளர் இசக்கி ராஜனை 9445006558 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

News October 26, 2024

113 அடியை எட்டிய சாத்தனூர் அணை

image

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டங்கத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6,450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 113.40அடி நீர் நிரம்பியுள்ளது. விரைவில் அணை நிரம்பும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

News October 26, 2024

2 கார்களுடன் 200 கிலோ குட்கா பறிமுதல்.

image

திருவண்ணாமலையை அடுத்த. ரிங்ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகம் அடைந்தால், கார் நிறுத்தாமல் தப்ப முயன்றனர் குட்கா கடத்திய காரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார், 2 கார்களுடன் 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜெகதீஷ் என்பவரை கைது செய்தனர். இதில் முக்கிய சப்ளையர்களை தேடும் பணியில் போலீசார் உள்ளனர்.

News October 25, 2024

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருள்மிகு சென்னியம்மன் பாறை ஆலயத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதாகை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 25, 2024

சாத்தனூர் அணையில் நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து இன்று (அக். 25) மதியம் 1. 00 மணிக்கு மேல் வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக எச்சரிக்கை விட்டுக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பண்டிகை கால உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

News October 25, 2024

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்.

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ரூபாய் 2 கோடியே 71 லட்சத்து 28 ஆயிரத்து 86 ரூபாய் . தங்கம் 110 கிராம், வெள்ளி 1150 கி.கிராம் ஆகும்.

News October 24, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

தி. மலையில் நாளை பெண்களுக்கான தடகளப்போட்டி

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நாளை (25-10-2024) திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலையை சார்ந்த 11 வட்டங்களில் இருந்து 900 மாணவிகள் பங்கு பெற உள்ளனர். முதல் 3 இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!