India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்து சமய அறநிலை துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் மண்டபங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அதனை திருவண்ணாமலை அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் அறநிலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எம்பி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (13.11.2024) புதன் கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம் மற்றும் தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
திருவண்ணாமலை பௌர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 15ஆம் தேதி 460 பேருந்துகள் மற்றும் 16ஆம் தேதி 245 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நவம்பர் 15,16 தேதிகளில் 81 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. எம். சுதாகர் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்வு, சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (13.11.2024), நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
தி.மலை அண்ணாமலையார் கார்த்திகை தீப திருவிழாவுக்காக உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருப்பதால் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் எவ.வேலு வலிறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருநாளன்று தி.ருமலையில் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும். அனைத்து கோவில்களிலும் விளக்கு ஏற்றுவதற்கான நெய் எண்ணைய் மற்றும் திரி ஆகியவற்றை இந்து சமய அறநிலை துறை சார்பில் வழங்கப்படும் என அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலையில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான பல் மருத்துவ முகாம் இன்று (நவ.12) நடைபெற்றது. இம்முகாமில், டாக்டர் இன்பநேசன், டாக்டர் சந்தானலட்சுமி மற்றும் டாக்டர் சந்தோஷ் ஆகியோருடன் கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பல் பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினர்.
way2newsக்கு செய்தியின் எதிரொளியால் ஒரே நாளில் தானிப்பாடி அரசு மருத்துவமனை அருகே இருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது. சாலையோரமாக வீசி சென்ற குப்பைகள் குறித்து நேற்று way2newsஇல் செய்தி வெளியானது. இந்நிலையில் உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் way2newsக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.