Tiruvannamalai

News November 20, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

100 நாள் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு

image

வந்தவாசி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் செய்யும் பணியையும், அங்கு 100 நாள் பணியாளர்கள் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.

News November 20, 2024

இன்று முதல் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

image

பிர்சா முண்டாவின் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பழங்குடியினர் தின விழா கொண்டாடும் விதமாகமாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர்,செங்கம், தண்டராம்பட்டு,கலசப்பாக்கம்,போளூர்,ஆரணி, சேத்துப்பட்டு,செய்யாறு,வெண்பாக்கம்,வந்தவாசி,ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாஅலுவலகங்களில் இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பழங்குடியினருக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த தி.மலை எம்பி

image

தி.மலை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆராஞ்சி ஊராட்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி,சி.என் அண்ணாதுரை எம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News November 20, 2024

திருவண்ணாமலை ஆட்சியர்  உத்தரவு 

image

தி.மலை தீபத் திருவிழாவுக்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் வசதிகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

News November 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

திமலை கார்த்திகை மாத சோமவார 1008 சங்காபிஷேகம்  

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 19, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

image

வந்தவாசி தாலுக்கா வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (55) கடந்த 2019 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி நேற்று பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News November 19, 2024

தி.மலையில் 616 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் உத்தரவிட்டார்.

News November 19, 2024

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூஜை பொருட்கள் நன்கொடை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கேரளா மாநிலத்தைச் சார்ந்த குருஜி ராமலிங்க சித்தாந்தி, சிவானந்தன் ஆகியோர் தீபாரதனை செய்யக்கூடிய ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளியால் ஆன 16 வகை பொருட்களை நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.

error: Content is protected !!