India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று (27.11.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 முன்னிட்டு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செயலாளர் அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளிடம் திரளான பொதுமக்கள் தங்களின் குறை மனுக்களை வழங்கினர். உடன் திருவண்ணாமலை காவல்துறை அதிகாரிகள்.
கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 25 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 120 கார் பார்கிங் இடங்கள் அமைக்கப்படுகின்றன. 50 வெளிமாவட்ட போக்குவரத்து ஆய்வாளர்கள் பணியாற்ற உள்ளனர். பயணிகள் பாதுகாப்புக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதுடன், அனுமதியில்லா வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தமிழக அரசு சாா்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ. 28) கடைசி நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் முதன்முறையாக பக்தர்களின் நலன் கருதி QR Code பொருந்திய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. தீபத் திருவிழாவிற்கு, வெளிமாவட்டங்களில் இருந்து QR Code ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் நவ.28 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டக்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும், 120 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. 18 பறக்கும் படைகளும் அமைக்கப்படும் என வேலூர் சரக்கு ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.