Tiruvannamalai

News December 2, 2024

தி.மலை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் 

image

ஃபென்சில் புயல் காரணமாக திருவண்ணாமலை மலை நிலச்சரிவு ஏற்பட்டு வஉசி நகர் பகுதியில் உள்ள வீடுகள் சிக்கிக்கொண்டது வீட்டில் இருந்த மகா வினோதினி ராஜ்குமார் மீனா கௌதம் இனியா ரம்யா ஆகியோர் நிலச்சரிப்பில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

News December 2, 2024

தி.மலை: 100 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 697 ஏரிகள் உள்ளன. ஃபென்சல் புயல் காரணமாக, சனிக்கிழமை காலை முதல் நேற்று இரவு வரை பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 647 ஏரிகளில், 100 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. மேலும்  26 ஏரிகள் 75 சதவீதமும், 99 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும் நிரம்பி உள்ளது. 

News December 2, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

தி.மலையில் சரிந்த பாறை : 7 பேர் நிலை ?

image

திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் 2 வீடுகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கனமழையால் தீப மலையின் அடிவாரப் பகுதியில் வ.உ.சி. நகர் கருமாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மலை அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகள் மீது பாறைகள் சரிந்து விழுந்தது. இதில், 7 நபர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் ஆட்சியர், எஸ்.பி சுதாகர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

News December 1, 2024

தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News December 1, 2024

இயற்கை வேளாண்மை களப் பயணம் மாணவிகளுக்கு சான்றிதழ்

image

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இயற்கை வேளாண்மை மற்றும் உரம் தயாரித்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி, செயலாளர் மு.ரமணன், சென்னை நாண்டி நிறுவன வேளாண்மை பயிற்சியாளர்கள் விக்னேஷ், கௌதம், கருப்புசாமி ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும், இயற்கை வேளாண்மை பற்றி அறிய களப் பயணம் மேற்கொண்டு தகவல்களை சேகரித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

News December 1, 2024

தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News November 30, 2024

தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

image

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலை இலக்கிய பேரவை செயலாளராக பேராசிரியர் தமிழன் பாபு, இளைஞரணி துணை செயலாளராக காயம்பட்டு ஜி.ஆனந்தன், மாணவர் அணி துணை செயலாளர் ஆர்.கே.ரமேஷ், வர்த்தக அணி செயலாளராக லயன் சி.எம். ரபீக் பாஷா ஆகியோர்களை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார்.

News November 30, 2024

ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (30.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு அவசரகால உதவி எண்

image

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மழை தொடர்பான தகவல்களை கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் தொலைபேசி எண் 04175-232377 தொடர்பு கொண்டு உதவி தேவைப்படுவோர் மற்றும் தகவல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!