Tiruvannamalai

News December 3, 2024

7ஆவது நபரின் உடல் மீட்பு

image

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கியவர்களில் 7ஆவது நபரின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கெனவே 6 பேரில் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்று கடைசியாக, மண்ணில் புதைந்த சிறுமி ரம்யாவின் உடல் நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 3, 2024

தீப திருவிழா ஏற்பாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு

image

திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், 40 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் திருவண்ணாமலை தீபத் திருவிழாவை நடத்துவோம். மகா தீபம் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 6,7இல் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம். கிரிவலப்பாதையில் சேதம் இருந்தால் உடனடியாக சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

image

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச.04) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக டிச.13 (10-ம் நாள் விழா) கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

News December 3, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 3, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (02.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம்

image

திருவண்ணாமலையில் நிலச்சரிவு சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பின்னர் பேட்டியளித்த அவர், 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிக்கப்பட்டது. எப்படியாவது நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டது. மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

News December 2, 2024

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 03) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

தி.மலை மண் சரிவு: 2 உடல்கள் மீட்பு

image

திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 2 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்பு பணிகள் 24 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வ.உ.சி நகரில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

News December 2, 2024

தி.மலையில் நிலச்சரிவில் சிக்கியவர் மீட்கும் பணி தீவிரம்

image

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடு புதைந்த இடத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக்ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், எம்பி அண்ணாதுரை ஆகியோர் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

News December 2, 2024

விழுப்புரம் – திருவண்ணாமலை ரயில் சேவை ரத்து

image

கனமழை பாதிப்பால் சென்னை- விழுப்புரம் இடையே ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம்- திருவண்ணாமலை வழித்தடத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருக்கோவிலூர் மற்றும் தண்டரை இடையேயான பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!