India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து, வல்லுநர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தீபத் திருநாளன்று பக்தர்களை மலை ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே நிற்க வைக்கப்பட மாட்டார்கள். டிக்கெட் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்போர் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்த பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று 8 பேர் கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுனர்கள் குழு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் திருவண்ணாமலை தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து மண் பரிசோதனை செய்து வருகின்றனர்.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
தி.மலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் டிச.16ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பணி மற்றும் 13ஆம் தேதி தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த மாவட்டத்திற்கு அரையாண்டுத் தேர்வு ஜன.2ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணம் இன்றி பயணிக்க 22 தனியார் பேருந்துகள்,172 பள்ளி பேருந்துகள் மற்றும் ரூ.10 பயண கட்டணத்தில் 36 சிற்றுந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திமலை தீபத் திருவிழா திண்டிவனம் ரோடு- ஒழுங்குமுறை விற்பனை கூடம், செங்கம் -சித்தர் மைதானம், வேலூர் ரோடு -அண்ணா ஆர்ச் ,சேத்பட் ரோடு -சிவகுமார் மைதானம் ,காஞ்சி ரோடு- டான் பாஸ்கோ பள்ளி மைதானம் ,வேட்டவலம் ரோடு -சர்வேயர் மைதானம் ,திருக்கோவிலூர் ரோடு -மாநகராட்சி பள்ளி மைதானம் ,மணலூர்பேட்டை ரோடு- எஸ் ஆர் கம்பெனி மைதானம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்துகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற டிசம்பர் 12 – ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 15 – ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை அரசு போக்குவரத்துக் கழகம், சென்னையிலிருந்தும், பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீப திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு நாளை முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுடன் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீப திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்க வைக்கப்படுவதற்கான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில், கொப்பரை வைக்கும் இடத்தில இருந்து 400 அடிக்கு மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் மண்சரிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.