Tiruvannamalai

News December 10, 2024

திருவண்ணாமலை தீபத் திருவிழா; எண்கள் அறிவிப்பு 

image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 04175 222303, 94981 00 431 அவசர உதவி எண் 100 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் 91596 16263 ஆகிய உதவி எண்களை டிசம்பர் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் செல்வது, மலை ஏற முயற்சிப்பது குற்றமாகும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News December 10, 2024

திமலை தீபத் திருவிழா: 267 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி

image

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்ற 267 பேர் அன்னதானம் வழங்கலாம். உரிமம் இல்லாதவர்கள் அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்னதானம் வழங்குபவர்கள் தரமான அன்னதான உணவை சரியாக தயாரிக்காத உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 10, 2024

டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகே உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

News December 10, 2024

கார் பார்க்கிங் அறிந்து கொள்ள ‘வாட்ஸ்அப்’ வசதி.

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 12-15 தேதிகளில் 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 116 கார் பார்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு காவல் துறை வாட்ஸ்‌ஆப் எண் 9363622330-க்கு தொடர்பு கொள்ளலாம். கற்பூரம் ஏற்றல், தற்‌காலிக கடைகள், கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துதல், அனுமதியின்றி மலையில் ஏறல் தடை செய்யப்பட்டு, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

News December 10, 2024

திருவண்ணாமலையில் 20 வீடுகள் கட்டி தரப்படும்: ஆட்சியர்

image

சமீபத்தில் நிகழ்ந்த ஃபெஞ்சல் புயலினால் திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் இறந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன.இன்று ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டியில், திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கு உடனடியாக தற்காலிக வீடு கட்டித் தரப்படும் என்றார்.

News December 10, 2024

திருவண்ணாமலையில் 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மொத்தம் 10,109 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4 நாட்களுக்கு 8,127 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News December 10, 2024

திருவண்ணாமலையில் மகா ரதங்கள் தேரோட்டம் 

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பஞ்சமூர்த்திகள் மகா ரதங்களும் தேரோட்டம் நடைபெற உள்ளதால் தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை நகரம் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

News December 9, 2024

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாடகை பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களிலேயே நிறுத்த வேண்டும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்திச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

தி.மலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

தி.மலை மாவட்டத்தில் அரையாளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பிராரம்பிப்பு பணிகள் நடைபெறுவதால் தச்சூர் விண்ணமங்கலம் மருசூர் அரையாளம் மதுரை பெரும்பட்டூர் நடுப்பட்டு தெள்ளார் நமத்தோடு கங்காபுரம் ஆவணியாபுரம் சாத்தமங்கலம் மேலானூர் ஆகாரம் அன்மருதை களம்பூர் கஸ்தம்பாடி அய்யம்பேட்டை முனுக்கப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

தி.மலை முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பாா்ம்., டி.பாா்ம்.,சான்றிதழ் பெற்றவா்களோ அல்லது பி.பாா்ம் மற்றும் டி.பார்ம்.,படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு டிச.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இணையதளத்தில் டிச.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

error: Content is protected !!