Tiruvannamalai

News December 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 19, 2024

கலைஞர் கைவினை திட்டம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை கலெக்‌டர் பாஸ்கரா பாண்டியன் கூறியபடி, தமிழ் நாடு அரசு கைவினைததொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் நவீன உதவிகளை வழங்கி, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோருக்கு கைவினை தொழில் கடன் உதவி அளிக்கின்றது. 25 வகை கைவினை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். மானியமும், குறைந்த வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் www.msmeonline.tn.gov.in இல் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News December 19, 2024

கனமழையால் 5,100 ஏக்கர் பயிர்கள் சேதம்

image

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் வந்தவாசி மற்றும் தெள்ளார் வட்டாரங்களில் பலத்த பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தவாசி வட்டாரத்தில் 1,700 ஏக்கர் நெல், 65 ஏக்கர் உளுந்து, 20 ஏக்கர் கரும்பு, 50 ஏக்கர் மணில்லா மற்றும் தெள்ளார் வட்டாரத்தில் 2,000 ஏக்கர் நெல், 30 ஏக்கர் கரும்பு, 375 ஏக்கர் உளுந்து, 260 ஏக்கர் மணிலா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

News December 19, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடர்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற முகாமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தார்.

News December 18, 2024

போதைப் பொருட்கள் விற்பனை செய்த இருவர் மீது பாய்ந்த வழக்கு

image

செங்கம் காவல்துறையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4520 கிராம் ஹான்ஸ் மற்றும் 100 கிராம் குளிர்ந்த உதடு ஆகிய போதை பொருட்களை மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் விற்பனை செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த குடுபா மகன் ஜாகீர் (வ-25) மற்றும் தளவாநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் ராமநாதன் (வ-47) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News December 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

பர்வதமலை மீது ஏற புதிய கட்டுப்பாடு

image

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது ஏற பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு. அதன்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி மற்ற நேரங்களில் அனுமதி, ஏறும் பாதை மூடப்பட உள்ளது. வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் தெரிவித்துள்ளனர்.

News December 18, 2024

நல வாரியங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

image

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் https://tnuwwb.tn.gov.in இணையதளம் மூலம் உறுப்பினராக சேரலாம். கல்வி, திருமணம், ஓய்வூதியம், விபத்து மரணம் உள்ளிட்ட நிதியுதவிகள் வழங்கப்படும் மற்றும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு ரூ.50,000 நிதியுதவி கிடைக்கும். இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

News December 18, 2024

மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டியில் பங்கேற்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ள திருக்குறள் கருத்தரங்கம்,விநாடி, வினா உள்ளிட்ட போட்டிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோா் டிச.21ஆம் தேதிக்குள் மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

News December 18, 2024

திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம் 

image

திமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்  நடக்கிறது. 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு நடத்தும். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பதிவு www.tnprivatejobs.tn.gov.in செய்யலாம் என்று கலக்டர் கூறினார்.

error: Content is protected !!