India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடக்கு, தெற்கு திருவண்ணாமலை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 23-12-2024 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழக அலுவலக வளாகத்தில் நடைபெறும். பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் நடைபெறும். செயற்குழுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 பேருக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நுழைவுச் சீட்டு நகலுடன் நேரடியாகவோ அல்லது 04175-233381 எண்ணில் தொடர்புகொண்டு பெயர் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இன்று வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தனியார் தொலைக்காட்சி சார்பாக +2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் திகார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க “உள்ளக புகார் குழு” அமைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். குழுவில் தலைமை அலுவலர், மூத்த பெண் அலுவலர் உள்ளிட்டோர் இருப்பார்கள். www.shebox.nic.in மூலம் புகார்களை பதிவு செய்யலாம். அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் மற்றும் தாளாண்மை இதழ் இணைந்து நடத்தும் மாநில அளவிலான இயற்கை வேளாண்மை பயிற்சி பட்டறை டிசம்பர் 21, 22 தேதிகளில் கலசப்பாக்கத்தில் நடைபெறுகிறது. அனைத்து விவசாய வேளாண்மை செயல் வீரர்களும் கலந்து கொள்ளலாம், நுழைவு கட்டணம் இல்லை. முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் அவர்களை (8072314815) தொடர்பு கொள்ளவும்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் டிரைவர்பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலை அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்நாளை சனிக்கிழமை நடக்கிறது. டிரைவர் பணிக்கு டிச.10ஆம் நடக்கிறது. டிரைவர் பெற்றிருக்க வேண்டும்.இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள்மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பால் பண்ணை குறித்த பயிற்சியில் விவசாயிகள் கலந்துகொள்ள முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் இன்று (டிச.20)மாலைக்குள் 04175-298258,9551419375 என்ற எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து,பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
திருவண்ணாமலை களம்பூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வடக்கு மாவட்டம் ஆரணி அருகே இத்தகைய போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியூட்டன், ந.முத்து தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும் 27-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள்,கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.