Tiruvannamalai

News January 3, 2025

புதிய பேருந்து நிலையம் அமைக்க திமுக எம்எல்ஏ ஆய்வு

image

செங்கம் அடுத்த புதுப்பாளையம் சந்தை மைதானத்தில் பேருந்து நிலையம் அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ் டி.சரவணன் கழக நிர்வாகிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பேருந்து நிலையம் அமைப்பதாக சட்டமன்ற உறுப்பினர் மக்களிடையே தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

2 நாட்களில் ரூ.10.56 கோடிக்கு மதுபானம் விற்பனை

image

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் சார்பில் 206 மதுக்கடைகளில் 2 நாட்களில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி ரூ.5.60 கோடியும், ஜன.1ஆம் தேதி ரூ.4.96 கோடியும் என மொத்தம் ரூ.10.56 கோடிக்கு மது விற்பனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இருமடங்கு மது பானங்கள் முன்பே சாத்தியமானது.

News January 3, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

குரூப்4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் சென்று விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம் என ஆட்சியர் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News January 2, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தொடக்கம்

image

திருவண்ணாமலையில் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை முடிந்து இன்று அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டது. புயல் மழையின் காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கும் ஜனவரி 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News January 2, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (02.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

தி.மலை அருகே கஞ்சா பதுக்கிய நபர் கைது

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூர் அத்திப்பட்டு வனப்பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள காட்டு நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு காய்வைத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த தட்டியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற நபரை நேற்று ஜமுனாமரத்தூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து  போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 2, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

image

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தரிசனத்துக்கு பக்தா்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்த  சாமி தரிசனம் செய்தனர். 

News January 1, 2025

பொது மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல்துறை

image

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நகரம் காவல் நிலையம் சார்பாக பஜார் நான்கு முனை சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் காவல்துறை அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். உடன் காவல் துறையினர் மற்றும்  துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 1, 2025

தி.மலை எம்.பி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பு

image

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 2025-ஆங்கில புத்தாண்டு தினத்தை விமர்சையாக கொண்டாடிவருகின்றனர். இதனையொட்டி, இன்று திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.என்.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

News January 1, 2025

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சைக்கிள் போட்டி 

image

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடக்கிறது. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டி பல இடங்களில் தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிகிறது. முதல் 3 இடங்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!