Tiruvannamalai

News January 12, 2025

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – தி.மலை சிறப்பு ரயில்

image

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரம் – தி.மலை இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற  நாளை காலை 9.25 மணிக்கு (ரயில் எண் 06130) விழுப்புரத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கமாக தி.மலையில் இருந்து அதே நாள் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் என்று தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

தி.மலையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் இன்று முதல் ஜன.16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதன்படி, தி.மலை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News January 12, 2025

நாளை கிரிவலம் செல்ல போறீங்களா?

image

2025ஆம் ஆண்டின் முதல் பெளர்ணமி ஜன.13ஆம் தேதி வருகிறது. ஜனவரி மாத பெளர்ணமியில் கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் ஜன.13ஆம் தேதி காலை 5.04 மணிக்கு தொடங்கி ஜன.14ஆம் தேதி அதிகாலை 3.57 மணிக்குள் தங்களின் கிரிவலத்தை நிறைவு செய்து விட வேண்டும். இதுவே கிரிவலம் செல்ல நல்ல நேரம் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிறவி துன்பங்களை போக்கி, முக்தியை அளிக்கக் கூடியது கிரிவல வழிபாடாகும். SHARE IT

News January 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2025

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.11) போலி லிங்குகள் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘போலியாக வரும் Link-குகளை கிளிக் செய்வதற்கு முன் பல முறை சிந்தித்துப் பாருங்கள்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News January 11, 2025

உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 15ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் நேற்று (ஜன.10) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், பாா்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 11, 2025

100 நாள் பணியாளர்கள் 23 பேர் படுகாயம்

image

செய்யாறு அருகே உள்ள பெருமாந்தாங்கல் கூட்டுரோடு பகுதியில், ஏரி வேலைக்கு சென்று திரும்பும் வழியில் மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணித்த 100 நாள் பணியாளர்கள் 23 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, மினி வேன் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News January 10, 2025

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், வரும் 13-ம் தேதி கொண்டாடப்படும் போகி பண்டிகையின் போது, பழைய டயர், பிளாஸ்டிக், செயற்கை இழை துணி, ரப்பர் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார். இதனால் ஏற்படும் காற்று மாசு மற்றும் நச்சு வாயுக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகுமென அவர் தெரிவித்தார்.

News January 10, 2025

தி.மலை மாவட்ட ஆட்சியர் தகவல் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மானியத்துடன் கூடிய மின் மோட்டாா்கள், கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் இயக்கும் கருவி ஆகியவற்றைப் பெற்று பயன்பெறலாம் இதுதவிர, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவிப் பொறியாளா்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

image

தி.மலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் ஆகியவற்றை எதிர்வரும் 15.01.2025 திருவள்ளுவர் தினத்தன்றும் மற்றும் 26.01.2025 குடியரசு தினத்தன்றும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கே பாஸ்கரன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!