Tiruvannamalai

News February 19, 2025

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் (21.02.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம். 

News February 19, 2025

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட மின் நுகா்வோருக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் கூட்டம்  நாளை காலை 10 மணிக்கு கிழக்கு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும். மின் நுகா்வோர்கள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு அறிவித்துள்ளார்.

News February 19, 2025

 சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

கீழ்பென்நாத்தூர் ஒன்றியம் கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (18) இவர் கல்லூரி முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது மேக்களூர் ஏரிக்கரை சாலை வளைவில் திரும்பும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்பென்நாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 18, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல்

image

தி.மலை மாவட்டத்தில் 1,061 கிராமங்களில் 4.18 லட்சம் விவசாயிகளுக்கு நில உடமை பட்டா சரி பார்க்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கொண்டு சென்று சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த மாத இறுதிக்குள் அடையாள எண் மற்றும் அட்டைகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தலைவர்  தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2025

சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த  ராமதாசு

image

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உழவர்களை திமுக நிர்வாகிகளைக் கொண்டு தாக்குவது, மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிராக மதிக்கும் நிலங்களை தர மறுக்கும் உழவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார். 

News February 18, 2025

தி.மலை அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று(பிப்.18) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பா. கணேசன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக வரகூர் அருணாச்சலம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக துரை.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 18, 2025

இன்ஸ்டா மூலம் பழகி சிறுமியை கர்ப்பமாகிய டிரைவர் 

image

செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் சத்தியமூர்த்தி(22) என்பவன் லாரி ஓட்டி வந்துள்ளான். அவன் இன்ஸ்டா மூலம் 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். திடீரென சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பதறி போன பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த  சத்தியமூர்த்தியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

image

புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22), லாரி டிரைவர். இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர் மாணவியிடம் காதலிப்பதாக பேசி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவ பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!