India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசு தின விழாவையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மேல்செட்டிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை துறைச் சாா்ந்த அலுவலா்கள் எடுத்துரைத்தனா். ஊராட்சியில் திட்டங்கள், வரவு-செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டது.
செய்யாறு அருகே புரிசையை சோ்ந்தவா் தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தன். இவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது மூலம் தெருக்கூத்து கலையை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ஊக்கம் ஏற்பட்டுள்ளது. தெருக்கூத்து கலையை அரசு பள்ளிகளில் விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி விடுமுறை தினமான இன்று வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாடு முழுதும் இன்று குடியரசு தினவிழா நடைபெறுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலைய நடைமேடை, டிக்கெட் பரிசோதிக்கும் இடம், பயணியரின் உடைமை ஆகியவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நடைமேடைகளில் ‘லக்கேஜ்’ உடன் வருவோர் மற்றும் பயணியர் கொண்டு வரும் ‘டிராவல் பேக்’ ஆக்கியவற்றையும், போலீசார் சோதனை செய்தனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை, துண்டு துண்டாக உடைக்கப்பட்டு முற்றிலும் அகற்றப்பட்டது. தற்போது டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் மும்முரமாக வ.உ.சி. நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறையும் தற்போது முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருவண்ணாமலை மக்கள் நிம்மதி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன், 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்தமைக்காக சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையான காஞ்சி ரோட்டில் உள்ள டீக்கடையில், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் கார்த்தி என்ற வாலிபர் நேற்று (ஜன.24) தகராறு செய்து வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அந்த வாலிபர் தகாத ஆபாசமாக பேசி, சப்-இன்ஸ்பெக்டர் கணபதியை தாக்கியுள்ளார். போலீசார் கணபதியை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, நடப்பாண்டிற்கான செயல் திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றலாம். தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.