Tiruvannamalai

News March 8, 2025

திருட்டு வழக்கில் வெளி வந்தவர் போக்ஸோவில் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது மாணவி,வந்தவாசி அருகே அரசு பள்ளியில் +1 படிக்கிறார்.கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி,வீடு செல்லவில்லை.புகாரின் அடிப்படையில் உதயசங்கர் (22),மாணவியை காதலித்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இவர் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 7, 2025

தோஷம் நீக்கும் வேணுகோபால் பார்த்தசாரதி கோவில்

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அருள்மிகு வேணுகோபால் பார்த்தசாரதி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இந்த பெருமாள் திருத்தலம் கட்டப்பட்டது. இருப்பினும் தனது பொழிவினை இழக்காமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. இங்கு ஒருமுறை சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2025

மாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற மற்றும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாக விளங்கும் ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலு‌ம் மாசி மாத பௌர்ணமி (13-03-2025) காலை 10.35 மணிக்கு தொடங்கி (14-03-2025) ம‌திய‌ம் 12.23 க்கு முடிகிறது எனவே, இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது நல்லது என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

வந்தவாசி அருகே கல்லூரி மாணவி திடீர் மரணம் 

image

வந்தவாசி பகுதியை கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுபிரியா (20), திண்டிவனம் அரசு கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு, திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2025

தி.மலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிரபல  நடிகை  

image

தி.மலை அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். அண்ணாமலையார் கோயிலில் இன்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலா பால். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News March 7, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News March 7, 2025

மாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் அக்னிரூபமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மாதம் பௌர்ணமி கிரிவலம் மார்ச் 13 ஆம் தேதி காலை 10:35 மணிக்கு தொடங்கி மார்ச் 14 ஆம் தேதி பிற்பகல் 12:23 க்கு முடிவடையும். பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது நன்மை பயக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 6, 2025

சிவலிங்க வடிவத்தில் யந்திர சனீஸ்வரர்

image

தி.மலை மாவட்டம் களம்பூர் போஸ்ட், திருஎரிகுப்பம் பகுதியில் பிரசித்திபெற்ற யந்திர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் யந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். ஜாதக ரீதியாக சனி நீசம் பெற்றவர்கள், தொழில் சிறக்க இங்கு எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குழந்தைபாக்கியம் பெற, திருமணம் தடை நீங்க இங்கு வழிபாடு செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!