Tiruvannamalai

News January 29, 2025

நெற்றியில் விபூதி பட்டையுடன் கிரிவலம் வந்த பிரபல நடிகர்

image

அண்ணாமலையார் கோயிலுக்கு, நடிகர் பாபி சிம்ஹா நேற்று (ஜன.28) வந்தார். சுவாமி வழிபாடு செய்து 14 கி.மீ., வரை கிரிவலம் சென்றார். மாஸ்க் அணிந்து, விபூதி, சந்தனம், குங்குமம், திலகம் அணிந்து தியானம் செய்ததால், ரசிகர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிப்பட்டு, கிரிவல பாதையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்களுடன் சென்றார்.

News January 29, 2025

வீடு புகுந்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

image

இ-சேவை மையம் நடத்தி வந்த வாலிபரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு, தனது வீட்டின் முன்பகுதியில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், கார்த்திகேயனை சரமாரியாக வெட்டியது. தப்பிக்க முயன்றும் முடியாததால், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 29, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (28.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர நேரத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் முளைத்த தர்கா ?

image

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து தர்கா என்று பரவும் வதந்தி தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. மலையே தர்காவுக்கு சொந்தம்னு சொல்லுவாங்க எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியானது. இது முற்றிலும் பொய்யான தகவல் எனக் கூறியுள்ள அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, இது கோவிலுக்கு சொந்தமான இடம் அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தர்கா இருப்பதாக கூறியுள்ளது.

News January 28, 2025

UGC வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி போராட்டம்

image

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் UGC புதிய வரைவு 2025 நெறிமுறைகளை திரும்பப் பெறக்கோரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 28, 2025

ஆன்லைன் மோசடிகளில் சிக்காதீர்கள்

image

முதலீட்டில் அதிக லாபம் என கூறி மோசடி செய்யும் நபர்கள் இணையதளத்தில் அதிகமானோர் உள்ளார்கள். எனவே, கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள் என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நிறைய பேர் தங்கள் பல கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News January 28, 2025

சாதி சான்றிதழ் வாங்குவதில் முதலிடம்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில் பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்களை அதிகளவில் வழங்கி உள்ளோம். கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் 170 அங்கன்வாடி மையங்கள் கட்ட உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். உங்கள் ஊர் பெருமையை ஷேர் செய்யலாமே.

News January 28, 2025

பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞருக்கு வாழ்த்து

image

வந்தவாசி அடுத்த புரிசையை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தனை, வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் வந்தை பிரேம் தலைமையில் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் கௌரவத் தலைவர் மலர் சாதிக் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் இணைச் செயலாளர் முருகன் துணைச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News January 28, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 27, 2025

பத்ம பூஷன் விருது அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் 

image

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (ஜன.26) அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் கோவில் முன்பு அஜித் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

error: Content is protected !!