Tiruvannamalai

News February 3, 2025

குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை

image

குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார். செய்யாறு, புரிசை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் பங்கேற்று பேசிய அவர், குழந்தை திருமணம் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, திருமணத்திற்கு வருபவர்கள், புகைப்படம் எடுப்பவர், மண்டப உரிமையாளர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

News February 2, 2025

இரவு நேர ரோந்து பணி காவலர் பட்டியல் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இன்று இரவு வந்து பணிக்கு செல்லும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் அவர்களுடைய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை ஏதேனும் ஏற்பட்டால் இவற்றினை பயன்படுத்தி அவர்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 100 என்ற எண்ணிற்கு அழைத்தும் புகார்களை பதிவு செய்யலாம்.

News February 2, 2025

போளூர் அருகே வாகன விபத்தில் குழந்தை பலி

image

போளூர் அடுத்த பாக்மார்பேட்டை அருகே வேலூர் தாலுகா பாலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சபரீஷ் ஆட்டோவில் அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் போளூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுகுறித்து போளூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 2, 2025

கல்வி உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.இந்த கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விருப்புவோருக்கு கடைசி தேதி பிப்ரவரி 28 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News February 2, 2025

தனியார் வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

செய்யாறில் வரும் பிப்.8 ஆம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெற உள்ளது.இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகலுடன் வர வேண்டும் எனவும் மேலும் விவரங்களுக்கு தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை

image

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாட வீதியில் போக்குவரத்துக்கு நிரந்தர தடை விதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட முயற்சியாக, ஆட்டோ, கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு நேற்று (பிப்.1) முதல் அனுமதிக்கப்படாது என ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டது. இது அமலுக்கு வந்தது.

News February 2, 2025

தீப மை பிரசாதம் தபால் மூலமும் பெற்று கொள்ளலாம்

image

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவல மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்.து பதினோராம் நாள் கார்த்திகை தீபத்தன்று, கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. தீப மை பெற விரும்புவோர் தற்போது தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 9159328013 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்கள்

News February 2, 2025

கணவரை மிரட்ட தூக்கில் தொங்கிய பெண் உயிரிழப்பு

image

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி – அம்சரேகா தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி இரவு மது அருந்திய ரவியை மிரட்டுவதற்காக அம்சரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நாடகமாடினார். ஆனால், சேலை கழுத்தை இறுக்கி உயிரிழந்தார். ரவி மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2025

தி.மலை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. வேகமாக சென்றால் உயிர் போகவும் வாய்ப்புள்ளது. விழிப்புடன் இருப்பீர்!! விபத்தை தவிர்ப்பீர் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

News February 1, 2025

திருவண்ணாமலையில் நாளை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

25 வயதுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நாளை (2/2/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி அளவில் எஸ்கேபி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்து முடிவுற்ற நிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற இருக்கிறது என்று தி.மலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!