India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கம் அருகே உள்ள புதுப்பாலையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (29) திருமணமான மறுநாளே, வீட்டில் உள்ள மேல் மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அறையை திறந்து பார்த்ததும், சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த புதுப்பாலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணருக்கான போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெ.தேவிபிரியா கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராயிடம் சான்றிதழ் பெற்றார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கலாமே. ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் மற்றும் திருமா மூடிஸ்வரர் சமேத திரிபூர சுந்தரி சுவாமிகள் எழுந்தருளிய ஆற்றுத் திருவிழாவில், 6 அடி உயரமுள்ள அகண்ட ஜோதி அகர்பத்தி ஏற்றப்பட்டது. இதனால் அங்கு பக்தி மனம் வீசியது. இந்நிகழ்வில் 5000 க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஷேர் பண்ணுங்க.
ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படாததால் நேற்று அப்பகுதி மக்கள் திடீரென ஆரணி செய்யாறு சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில், மக்களின் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. புதிய கலெக்டராக பதவி ஏற்ற அவர், 591 மனுக்களை பெற்றுக்கொண்டார். அவை கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு பட்டா, வேலை வாய்ப்பு போன்ற கோரிக்கைகளாக இருந்தன. 30 நாட்களுக்கு மேல் மனுக்கள் நிலுவையில் வைக்கப்படக்கூடாது என அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக கே.தர்பகராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார். அரசு அலுவலர்கள், துறையை சார்ந்தஅரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ஆவது மாவட்ட ஆட்சியராக க.தர்பகராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இவர் பணிபுரிந்தார். புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு அங்கு பணிபுரியும், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியில் கட்சியிப்பினர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வருகின்ற பிப்ரவரி 7,8,9 ஆகிய 3 நாட்கள் சேலத்தில் 64 ஆவது சப் ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை அணி பங்கு பெற உள்ளதால் திருவண்ணாமலையைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் (04-02-2925) அன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும் தகவலுக்கு செயலாளர் ராஜா என்பவரின் +91 93457 97313 எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 109 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
Sorry, no posts matched your criteria.