Tiruvannamalai

News February 6, 2025

இணைய வழி விளையாட்டு குறித்து கட்டுரை போட்டி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டி நடத்தி அதற்கான அறிக்கையினை இன்று(பிப்.6) மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என DEO கூறிய நிலையில் பல பள்ளிகள் அவர்களின் அறிக்கையை DEO அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

News February 6, 2025

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் கைது

image

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகளை இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

News February 6, 2025

புகாருக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஓவியர் ஹரிஷ்பாபு என்பவர் தவெக கட்சியில் பணம் மற்றும் ஜாதி பார்த்து பதவி வழங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவிற்கு அது போன்ற செயலில் நமது கட்சி ஈடுபடவில்லை என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க. SHARE IT. 

News February 6, 2025

மாணவி வன்கொடுமை; காமுகனுக்கு 20 ஆண்டுகள் சிறை 

image

செங்கம் தாலுகா, புதுப்பாளையம் அடுத்த வீராணந்தல் கிராமத்தை சேர்ந்தவன் வினோத் (26). இவன், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடந்த 5.11.2020 அன்று கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். போக்சோ வழக்கில் கைதான இந்த கொடூரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், வினோத் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். 

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News February 6, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு 

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (05.02.2025) செங்கம் வட்டம், மேல்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கர்ப்பிணிக்கு முறையாக மருத்துவம் பார்க்கப்படுகிறதா என சிகிச்சை குறித்து அர்யாகுஞ்சுர் ஊராட்சியை சார்ந்த கர்ப்பிணியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்கள்.

News February 6, 2025

தி.மலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 08 சனிக்கிழமை அன்று காலை 9 மணி – 2 மணி வரை செய்யாரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News February 5, 2025

தி.மலை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

image

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதி ஆண்டின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News February 5, 2025

எந்தெந்த நாளில் கிரிவலம் சென்றால் பலன்?

image

ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும், திங்கட்கிழமை வலம் வந்தால் இந்திரலோக பதவியும் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன், வறுமை விலகும். புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், வியாழக்கிழமை வலம் வந்தால் ஞானமும், வெள்ளிக்கிழமை வலம் வந்தால் வைகுண்ட பதவியும் கிடைக்கப்பெறுவார்கள். சனிக்கிழமை அன்று வலம் வருவது பாவப்பிணிகளில் இருந்து மக்களை காக்கும். ஷேர் செய்யுங்கள்

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!