India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை: உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து திமுக தலைமை அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றி 31.3.25க்குள் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.
திருவண்ணாமலை அருகே ஜடேரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஜடேரி நாமகட்டி நீர் சார்ந்த சிலிக்கேட் தாதுக்களின் வளமான படிவிலிருந்து, களிமண் பதப்படுத்தப்பட்டு விரல் போன்ற குச்சிகளாக வடிவமைக்கப்படுகிறனர். ஜடேரி நாமகட்டி சிலைகள், மனிதர்கள் மற்றும் கோயில் யானைகளின் நெற்றிகளை அலங்கரிக்கப் பயன்படுகிறது.
ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. எனவே செங்கல்பட்டில் கேன் தண்ணீர் வாங்கும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறியுறுத்தல். ஷேர்
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.77% கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 ஆயிரத்து 850 பேருக்கு ரூ.34 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 சதவீததிற்கும் அதிகமான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(45) கட்டிட மேஸ்திரி. இவர் வேலைக்கு சென்று விட்டு கிடைக்கும் கூலியை வைத்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் தினந்தோறும் மனைவியுடன் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் போதையில் சுரேஷ் வந்துள்ளார்.அப்போது அவரது மனைவி ஹேமாவதி தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தி.மலை, சேத்துப்பட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் பரத் (9) ,தேவேஷ் (4) என்ற இரண்டு சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத நிலையில் சந்தேகத்தின் பேரில் உறவினர் தீயணைப்பு துறை மற்றும் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சிறுவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துஅரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம்வேளாண்மை, அரசின் ஒற்றைச் சாளர முறையில்(கவுன்சிலிங்) கல்லூரிச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற தனியார் சோலார் பேனல் நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிகிரி,டிப்ளமோ, ஐடிஐ, +2 தேர்ச்சி பெற்றிந்தால் போதும். சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் மாத சம்பளம் 15,000 முதல் 25000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏழ்மையான நிலையில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், வேளாண்மை ஆகிய தொழிற்படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல்
Sorry, no posts matched your criteria.