Tiruvannamalai

News February 11, 2025

பருவத மலைக்கு வந்த பிக் பாஸ் பிரபலங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டம் பருவத மலைக்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வரும் நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் பங்குபெற்ற பவித்ரா ஜனனி மற்றும் ராயன் ஆகியோர் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பருவதமலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பவித்ரா பருவத மலைக்கு செல்ல வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது. 

News February 11, 2025

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கப்படவுள்ளது. விண்ணப்பங்கள், தி.மலை மாவட்டம் ஆட்சியர் அலுவலக இணையதளம் (https://tiruvannamalai.nic.in/) மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025 என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

1,124 காலிப் பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 11, 2025

4 வயது சிறுமி சிலம்பம் போட்டியில் முதலிடம்

image

சங்கராபுரத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 வயது ஸ்ரீதன்யா முதலாம் இடம் பெற்றார். விருது பெற்ற சிறுமியை பாஸ்கர் கௌரவித்தார். சந்தானம் சிலம்பம் அகாடமியின் 20 மாணவர்களில் 12 பேர் முதல் பரிசையும், 8 பேர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.

News February 11, 2025

கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

image

நாவக்கரை பகுதியை சேர்ந்த ரூபன் (26), இன்ஸ்டாகிராமில் 20 வயது இளம்பெண்ணுக்கு காதல் வலை விரித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 7ஆம் தேதி அங்குள்ள சுடுகாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது நண்பர் தனுஷ் (20) உடன் சேர்ந்து கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போலீசார் நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 10, 2025

குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய ஆட்சியர்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் 10/02/2025 இன்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்கள். உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News February 10, 2025

திருவண்ணாமலையில் புத்தக கண்காட்சி

image

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈசான்ய மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 24 வரை 100 புத்தக கதைகளுடன் 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பக்கராஜ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் தென்பட்டாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் அல்லது 100 என்ற எண்ணை அழைத்து தங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 10, 2025

ஆரணி அருகே  சாலை விபத்தில்  2 பேர் பலி

image

ஆரணியை அடுத்த கீழ்நகர் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), கணேஷ் (38) இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கீழ்நகர் நோக்கி மொபெட்டில் திரும்பிக் கொண்டிருந்தனர். அரியப்பாடி பகுதியில் வேலூர் சாலையை கடந்தபோது மேல்மருவத்தூர் சென்றுவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்து மொபெட் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

error: Content is protected !!