Tiruvannamalai

News February 21, 2025

கீழ்பெண்ணாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

கீழ்பெண்ணாத்தூர் தாலுகா ஐங்குணம் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் சோமசு பாடிக்கு வந்து ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரணை

News February 21, 2025

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியவர் கைது

image

சேத்துப்பட்டு அருகே அனாதிமங்கலம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் வெங்கடே சன் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 24). இவர் நேற்று அதிகாலை லாரியில் மணல் கடத்திக்கொண்டு சேத்துப்பட்டு மருத்துவாம்பாடி கூட்டு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீ சார் லாரியை மடக்கி பிடித்து, பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தி வந்த யுவராஜை கைது செய்து விசாரணை

News February 20, 2025

போதை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

image

வடவணக்கம்பாடி சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (55) கடையில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பாஸ்கரன் மற்றும் ஜலாராம் மகன்கள் சாவாராம் (31), சனவலாராம் (26) மற்றும் சுரேஷ்குமார் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News February 20, 2025

சேவூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது.

image

அரணி அருகே சேவூரில் கஞ்சா விற்பனை செய்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து,  சேவூரில் போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாபு அருகில் உள்ள கோயிலின் பின்புறம் மறைந்திருந்தார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் இருந்த  1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பாபுவை கைது  சிறையில் அடைத்தனர்.

News February 19, 2025

தி.மலை BSNL அலுவலகத்தில் தீ விபத்து

image

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் மின் கசிவின் காரணமாக அலுவலகத்தின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கம்ப்யூட்டர், பணம் என்னும் கவுண்டிங் இயந்திரம், டிவி, ஏசி உள்ளிட்டவைகள் முற்றிலும் சேதம் அடைந்தது.   

News February 19, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 19, 2025

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் 

image

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். 

News February 19, 2025

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் (21.02.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம். 

News February 19, 2025

திருவண்ணாமலையில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட மின் நுகா்வோருக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் கூட்டம்  நாளை காலை 10 மணிக்கு கிழக்கு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும். மின் நுகா்வோர்கள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு அறிவித்துள்ளார்.

News February 19, 2025

 சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

கீழ்பென்நாத்தூர் ஒன்றியம் கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (18) இவர் கல்லூரி முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது மேக்களூர் ஏரிக்கரை சாலை வளைவில் திரும்பும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்பென்நாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!