India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2:30 மணிக்கு 3ஆம் கால பூஜையும், 4:30 மணிக்கு 4ஆம் கால பூஜையும் நடைபெறும்.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு (DISHA) கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரணிவேந்தன் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் மற்றும் அரசுத்துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
வந்தவாசியில் தனியார் பள்ளி பஸ் வேகத்தடை ஏறும்போது அவசர கால கதவு திறந்து மின் கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, பஸ்சில் இருந்த 9 மாணவர்கள் முன்பக்கம் அமர்ந்து இருந்ததால் உயிர் தப்பினர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பான தகவலை பெற்றோர், போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ரோடு கரியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பிக்கப் வேனின் பின்புறம் செங்கம் நோக்கி வந்த கார் மோதி சாலையின் ஓரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் பாலாஜி (24) குடும்ப பிரச்சினையால் சென்னையிலிருந்து மீண்டும் தி.மலை வந்தார். இந்நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 21) போலியான ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக கொடுக்கப்படும் என மோசடிகள் தற்போது அதிகமாக நடந்து வருகின்றன எனவே கவனமாக இருக்கவும் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் விளையும் ஜவ்வாது மலை புளிக்கான புவி சார் குறியீடு பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலர் மூத்த அலுவலர் ரமணன் மற்றும் ஆலோசகர்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையில் ரீட் தொண்டு நிறுவன இயக்குனர் வழக்கறிஞர் தனஞ்செயன், மேல்பட்டு வன சரகர் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 28 வயதிற்குள் இருக்கும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.70,290 வரை சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் https://clri.org/careers.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச்.01. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.