Tiruvannamalai

News February 23, 2025

பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், MyV3 ஆப் பயன்படுத்தி பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவலர்களை அணுகி புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News February 23, 2025

திருவண்ணாமலை கோவிலில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

கிணற்றில் விழுந்த பிளஸ்-2 மாணவி பலி

image

திருவண்ணாமலை புதுகார்கானா தெருவை சேர்ந்த +2 மாணவி தர்ஷினி, கடந்த 19-ந் தேதி மாலையில் அவரது தந்தைக்கு போன் பேசுவதற்காக மாடிக்கு சென்ற போது அங்கிருந்து தவறி வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் விழுந்ததார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

26ஆம் தேதி மகா சிவராத்திரி விழா

image

அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. இரவு 7:30 மணிக்கு மகாசிவராத்திரியின் முதல் கால பூஜையும், இரவு 11:30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2:30 மணிக்கு 3ஆம் கால பூஜையும், 4:30 மணிக்கு 4ஆம் கால பூஜையும் நடைபெறும்.

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த இணையத்தில்<<>> வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வைக்குழு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு (DISHA) கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் தரப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரணிவேந்தன் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் மற்றும் அரசுத்துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News February 22, 2025

தனியார் பள்ளி பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து.

image

வந்தவாசியில் தனியார் பள்ளி பஸ் வேகத்தடை ஏறும்போது அவசர கால கதவு திறந்து மின் கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, பஸ்சில் இருந்த 9 மாணவர்கள் முன்பக்கம் அமர்ந்து இருந்ததால் உயிர் தப்பினர். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து தொடர்பான தகவலை பெற்றோர், போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 22, 2025

பிக்கப் வேன் மீது கார் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ரோடு கரியமங்கலம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போச்சம்பள்ளியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பிக்கப் வேனின் பின்புறம் செங்கம் நோக்கி வந்த கார் மோதி சாலையின் ஓரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 22, 2025

அணைக்கட்டு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

image

திருவண்ணாமலை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் பாலாஜி (24) குடும்ப பிரச்சினையால் சென்னையிலிருந்து மீண்டும் தி.மலை வந்தார். இந்நிலையில் மேட்டுப்பட்டி பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!