India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் மாணவி. இம்மாணவியை கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன் ( 20) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்து, மாணவியை கர்ப்பமாக்கி உள்ளார். புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மதியரசன் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 13.3.25 காலை 9:30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு 11:10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். பிற்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2:15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மற்றும் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 13ஆம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும், மார்ச் 14ஆம் தேதி 270 பேருந்துகளும், மார்ச் 15ஆம் தேதி 275 சிறப்பு பேருந்துகளும் இயக்க போக்குவரத்துக் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. உங்கள் தனிப்பட்ட நிதித் தகவல்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள். நம்பகமான மூலத்திலிருந்து வந்ததாகக் கூறினாலும், உங்கள் OTP-ஐ யாருடனும் ஒருபோதும் பகிர வேண்டாம் என விழிப்புணர்வு புகைப்படத்தை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் பி.எம். கிசான் (PM Kisan) பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாய அடையாள எண் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். விவசாயிகள் அனைவரும் அக்ரிஸ்டாக்/கிரைன்ஸ் திட்டத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பொதுசேவை மையங்களில் எவ்வித கட்டணமும் இன்றி 31-3-2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இன்று (11.03.2025) திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்தள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் பல்வேறு கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எஸ்.யூ. வனம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி, எம்.பி. எம்.எஸ். தரணிவேல் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை, வேட்டி வழங்கி, கட்சியில் முழுமையாக ஈடுபட்டு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் எந்த இடத்தில் இருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்கலாம். என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் இந்த நேரத்தில் கிரிவலம் சென்று அண்ணாமலையார் அருள் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.