Tiruvannamalai

News March 14, 2025

11 மாத குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

image

சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கிருபானந்தன் – மாலா தம்பதியின் 11 மாத குழந்தை வேதா ஸ்ரீ கடந்த 28ம் தேதி சுயநினைவு இழந்து உயிரிழந்தது. மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலின விகிதம் குறைவு காரணமாக மருத்துவர் அருண்குமார் புகாரில் தெரிவித்ததால், போலீசார் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கை பின் தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

News March 13, 2025

ஊராட்சி மன்ற அலுவலகத்தை நொறுக்கிய இளைஞர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று மதியம் அரிவாளுடன் நுழைந்த மணிகண்டன் என்ற இளைஞர் அலுவலகத்தில் கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தினர் உடனடியாக விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் <>தேதிக்குள் <<>>விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் இன்று (மார்ச் 13) பகல் 12:40 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 2:15 க்கு சென்றடையும். விழுப்புரத்தில் இருந்து (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் 9:25க்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு 11:10 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2025

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கழிகுளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பரசுராமன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் பரசுராமனின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 13, 2025

3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி எரித்து கொலை

image

தி.மலையில் 3 சென்ட் இடத்திற்காக மூதாட்டி ஒருவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விருதாம்பாள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவத்தில் எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 12, 2025

தி.மலை மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 12, 2025

மனத்துயரம் நீக்கும் தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில்

image

தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே அருள்மிகு தேவபுரீசுவரர், வேதநாதர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கும். இத்தலத்தில் உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை <>கிடைக்கும்.<<>>

News March 12, 2025

ஜலகண்டேசுவரர் கோயிலில் தேர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

image

வந்தவாசி அருகே ஜலகண்டேசுவரர் கோயிலில் மாசி மகம் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மாசி மகம் திருவிழா முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 தேர்களில் 1 தேர் தீ பற்றி எரிந்தது.இதனால் அங்கு கூடிய இருந்த மக்கள் உடனடியாக அருகில் இருந்த தீ அணைப்பினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இச்சம்பம் குறித்து விசாரணை செய்து வருகின்றது.

error: Content is protected !!