Tiruvannamalai

News March 18, 2025

தி.மலை கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நமிதா

image

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கடந்த சில தினங்களாகவே திரைப்பட நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர். இன்று நடிகை நமிதா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 18, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களைகளையும் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கும் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க

News March 18, 2025

பைனான்ஸ் ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆரணி ஆரணி பாளையம் சந்தா தரவை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி கொலை செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ரமேஷ் என்பவரை நேற்று ஆரணி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கணேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 17, 2025

பூங்காவில் சிறுத்தை கொண்டுவர திட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்துள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது பூங்காவில் சிறுத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூண்டு அமைக்க ரூ.25 லட்சம் நிதி கேட்கப்பட்டுள்ளது. முதலைகள், பாம்புகள், பறவை இனங்கள் கொண்டு வரவும் திட்டம் என வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

News March 17, 2025

தி.மலை: செருப்பு மாலையுடன் முதியவர் தர்ணா போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் நாராயணசாமி. இவர், தென்னகரம் ஏரியிலிருந்து கீழ்பொத்தரை, மேப்பத்துறை வரை செல்லும் நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வலியுறுத்தி செருப்பு மாலையுடன் இன்று (17-03-2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News March 17, 2025

10ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்.. ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <>கிளிக்<<>> செய்யவும்.

News March 17, 2025

 ‌‌‍‌சட்டப்பணிகள் ஆணைக் குழு அழைப்பு ‌

image

தி.மலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மார்ச்.28-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தி,மலை என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

கண்ணமங்கலம் அருகே ரயில் மோதி முதியவர் பலி

image

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (65), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் மேல்நகர் கிராமத்தில் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சண்முகத்தின் உடலை மீட்டு , விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2025

திருவண்ணாமலை: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2025

கழுத்தை நெரித்து கிணற்றில் வீசிய இளைஞர் கைது

image

தி.மலை மாவட்டம் பாடகம் பகுதியில் சக்திவேல் என்ற இளைஞர் காவல்துறையில் சேருவதற்காக தனியார் அகாடமியில் பயின்று வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் பிரிந்த நிலையில், மீண்டும் சக்திவேல் அந்த பெண்ணை காதலிக்க தொடர்ந்து வற்புறுத்துள்ளார். அந்த பெண் மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற சக்திவேல், இறந்த பின் உடலை கிணற்றில் வீசியுள்ளார்.

error: Content is protected !!