Tiruvannamalai

News April 28, 2025

திருவண்ணாமலை சிறப்புகள்

image

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

தி.மலையில் எந்த பதவியில் யார்?

image

▶ தி.மலை மாவட்ட ஆட்சியர்- தர்ப்பகராஜ் (04175-233333)
▶ தி.மலை மாவட்ட எஸ்.பி- சுதாகர் ( 04175-233431)
▶ மாவட்ட வருவாய் அலுவலர்- இராம்பிரதீபன் (04175-233006)
▶ தி.மலை மாவட்ட திட்ட இயக்குனர்- ரா.மணி (04175-233720)
மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.

News April 28, 2025

தி.மலையில் 500 பேருக்கு IT வேலை ரெடி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடி துறைகளை மேம்படுத்த மினி டைடல் பார்க் அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.34 கோடி செலவில் டைடல் பார்க் கட்டப்படும் என்றும், இது 4 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும், ஓராண்டில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தி.மலை இளைஞர்கள் 500 பேர் ஐடி துறையில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

தி.மலை கோயில் பணம் வீண்- ஐகோர்ட் கேள்வி

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு நிறுவனம் சார்பில் அன்னதானம் சமைப்பதற்கு சிலிண்டர் ஒன்று ரூ.1,830க்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.1,950 வீதம் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும் போது அதிக விலைக்கு வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27-04-2025)
ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News April 27, 2025

வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

image

வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் இரவு நேர பணிக்கு சென்றார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் வீடுகள், தோழிகளின் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை பிரம்மதேசம் போலீசில் புகாரளிதார்.

News April 27, 2025

தி.மலையில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்

image

▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
கோடை விடுமுறையில் சிற்றுலா செல்ல முக்கிய இடங்களான இவற்றை மற்றவர்களுக்கும் ஷேர் பண்னுங்க.

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 27, 2025

டாஸ்மாக் கடைகளுக்கு மே 1-ஆம் தேதி விடுமுறை

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுக் கூடங்கள் ஆகியவற்றுக்கு மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், உத்தரவை மீறி மதுபானங்களை விற்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் எச்சரித்துள்ளார்.

News April 26, 2025

வேலைவாய்ப்பு தரும் திருவண்ணாமலை கோயில்

image

திருவண்ணாமலை தேவிகாபுரத்தில் அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அம்பாளை வழிபட்டுவிட்டு பின்னர் சிவனை வழிபடுகின்றனர். வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!