India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை, 27 ஆயிரத்து 615 மாணவ-மாணவிகள் எழுதினா். இதில் 503 மாணவ-மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. தோ்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும் படையினா், அறை கண்காணிப்பாளா்கள் என மொத்தம் சுமாா் 3 ஆயிரம் போ் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
ஆரணி அருகே இரும்பேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த அப்பு (21) தனது நண்பர் ஆகாஷுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அப்புவுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதமே ஆனது. ஆரணி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் தாமனூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாருக்கும் (22), தேசூர் பகுதியில் உள்ள அரசினர் மாணவிகள் விடுதியில் தங்கிப்படிக்கும் 16 வயது நிரம்பிய +1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மாணவியிடம் ஆசை வார்த்தைகூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாக தெரியவருகிறது.இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் தேசூர் போலிசில் புகார் அளித்ததன் பேரில் உதயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தெள்ளார் – வந்தவாசி சாலையில் அமைந்துள்ள ராஜா நகர் கிராமத்தின் நுழைவுப் பகுதியில் மோனாலிசாவின் உருவம் வரையப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் அனைவராலும் அறியப்பட்டவர் மோனாலிசா. இவரது உருவப்படம், ராஜா நகர் கிராமம் மூர்த்தி ஆர்ட்ஸ் என்ற கலைஞரால் வரையப்பட்டது. ஊருக்கு ஒரு அடையாள குறியீடாக இந்த வரைபடம் வரைந்து அசத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி மற்றும் அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (05.03.2025) துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், துறைச் சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இனி மாதத்தின் 2-வது வியாழக்கிழமை திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், 3-வது வியாழக்கிழமை ஆரணி கோட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு ஆரணி தாலுகா அலுவலக வளாகத்திலும், 4-வது வியாழக்கிழமை செய்யாறு கோட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு செய்யாறு ஆர்.சி.எம். உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடைபெறுமென மாவட்ட ஆட்சியர் தகவல்
Sorry, no posts matched your criteria.