India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் டி.சா்வேசன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரியின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.
திருவண்ணாமலை காமராஜ் சிலை அருகே பாலஸ்தீன கடைசி எல்லை ரஃபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலச் செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி. என். அண்ணாதுரை அவர்கள் தனக்கு வாக்களித்த வாக்காளர் பொதுமக்களுக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மீண்டும் மக்கள் பணியாற்றிட வாய்ப்பு தந்தமைக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் சி. என். அண்ணாத்துரை- 5,47,379 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்- 3,13,448 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்- 1,56,650 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரமேஷ்பாபு- 83,869 வாக்குகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(ஜூன் 5) முதல் புதிய ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பம் செய்து உடனே பயன் பெறலாம். பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய குடும்ப அட்டைக்களை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா, நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி ஜெயதி பூர்வஜா 720/720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பூர்வஜாவுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நேற்று(ஜூன் 4) தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.