India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சாா்பில் 1040 நகரப் பேருந்துகள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையைக் காண்பித்து நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போளூர்,படியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் நேற்று கலசப்பாக்கம் அருகே உள்ள நாயுடு மங்கலம் பகுதிக்கு சென்று பின்னர் வீடு திரும்பிய போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த நெடுஞ்செழியன் தி.மலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது. இதில்மண்ணால் செய்து வைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவ பொம்மையின் தொடை பகுதியை பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா் கதாயுதத்தால் தாக்கி பிளக்கும் காட்சி நடித்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்யாறு, நெடும்பிறை கிராமத்தில் உள்ள குளத்தில் விடுமுறை தினமான இன்று ஐந்து சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில் நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்த பரத் குமார், சந்தோஷ் குமார் மற்றும் செய்யாறு நகரைச் சேர்ந்த சாய்சரண் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. திருத்தம் தேவைப்படும் மாணவர்கள் தற்போதைய மதிப்பெண் சான்றிதழ் நகலில் கையெழுத்திட்டு தலைமையாசிரியர் மூலமாக மாவட்ட தேர்வு அலுவலகத்தில் ஜூன்.12 க்குள் ஒப்படைக்க வேண்டும்.
தி.மலை மாவட்டம் பிற்பட்டோர் நலத்துறையால் செயல்படும் 49 விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 16-06-24 தேதி வரையிலும், விடுதியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15-07-24 வரையிலும் விண்ணப்பத்துடன் வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழுடன் பிற்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டுமென ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், 3,545 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,049 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை தற்போது ரூ.16,000 முதல் ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் சன்மானம் உயர்த்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் சேகர் என்பவர் வீடு கட்டுவதற்காக தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை எழுதி தருமாறு பிரச்னை செய்துள்ளார். பின்னர், முத்துவை சரமாரி தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் இன்று குரூப்-4 தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 267 தோ்வு மையங்களில் 73, 224 போ் எழுதுகின்றனா் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.