India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மணலூர்பேட்டை சாலை மேல்புத்தியந்தல் அருகே நேற்று இரவு கார் ஒன்று வேகமாக சென்றது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. காரை ஒட்டி சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை சேர்ந்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். இவ்விபத்து குறித்து தச்சம்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஏரி கரையில் ஏழுமலை மனைவி பிரேமா என்பவரை அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த பிரேமா வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேமாவை தாக்கிய மூன்று இளைஞர்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தி.மலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரைப்படி காந்தி சிலை முன்பு கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க கரும்பு ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை மாவட்ட பிரதிநிதி இல.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு. ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர் மண்டி ஆ. பிரகாஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102. 2 டிகிரி பாரன்ஹீட், 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 109 அடியாகும். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து மிகக் குறைவாக உள்ளது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்றைய நீர்மட்டம் 80.8 அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தி.மலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் ரூ. 200-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று பெண்கள் வேப்பிலை தோரணம் கட்டி வீதியில் தோறும் உலா சென்று கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர். ராஜபாளையம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே சிலம்பாட்ட கலைஞர்கள் மனித உடல் மீது தலைகீழாக நின்று தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.
தி.மலை மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள், வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கம் தோக்கவாடி பிரதான சாலையில் இயற்கை உபாதை கழிக்க தோக்கவாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாசலா, அவரது கணவர் முனியப்பன் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே உள்ள எஸ் யூ வனம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாலு சொத்து தகராறில் வயலில் நீர் பாய்ச்சியபோது தனது பெரியப்பா ஆறுமுகன் என்பவரை தாக்கி ஆறுமுகனின் பல்லை உடைத்துள்ளார். பல்லை உடைத்த தங்கபாலு மீது ஆரணி கிராமிய காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாராணி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.