India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு சேர விரும்பும் மாணவர்கள் இன்று ஜூன் 7 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதை ஒட்டி மாணவர்கள் சேர்க்கையினை கருத்தில் கொண்டு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கால நீட்டிப்பு அவகாசம் வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மே மாதம் நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு பெற இயலாதவா்கள் அந்தப் பொருள்களை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெறுவதற்கு ஏதுவாக கடைகளின் விற்பனை முனையக் கருவியில் தேவையான அனைத்து மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அவலூர்பேட்டை ரிங் ரோடு செல்லும் வழித்தடம் என்பதால் ரயில்வே கேட் இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் போது ஏற்படும் போக்குவரத்து பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகிறது. ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசாங்க நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 5 முதல் நேற்று மாலை வரை அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 42.8 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, திருவண்ணாமலையில் 5, செங்கத்தில் 4.2, போளூரில் 10, ஜமுனாமரத்தூரில் 1.6, கலசப்பாக்கத்தில் 17, ஆரணியில் 4.8, வந்தவாசியில் 10, கீழ்பென்னாத்தூரில் 7.2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் தொடா்ந்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கலசப்பாக்கம், பர்வதமலை , கல்லூரி மாணவர் புவனேஷ் மே-2 பைக்கில் சென்றபோது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானார். தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று மூளை சாவு அடைந்தார். பெற்றோர் அனுமதியுடன் சிறுநீரகம், கல்லீரல், கண்விழி தானமாகதரப்பட்டது . மாணவன் உடலுக்கு டீன் தேரணிராஜன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளையும் நாளை மறு தினமும் தலா 15 பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தகவல் அளித்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் வெளியூர் சென்று விட்டு உள்ளூர் வரும் காரணத்தால் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி I.N.D.I.A கூட்டணியின், திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை, வெற்றி பெற்றதை முன்னிட்டு, இன்று (06.06.2024) திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் எ. வ. வே. கம்பனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் டி.சா்வேசன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரியின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.
திருவண்ணாமலை காமராஜ் சிலை அருகே பாலஸ்தீன கடைசி எல்லை ரஃபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி பொதுமக்களையும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலச் செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.