Tiruvannamalai

News June 20, 2024

உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கள்ளச்சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

News June 20, 2024

ஜீவன் ரக்க்ஷா விருதுக்கு விண்ணப்பம்

image

தி.மலை மாவட்டம், இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்கள் , மின்சார, தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்களை காப்பாற்றிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News June 19, 2024

தி.மலை: அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் அறிவிப்பு.

image

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரும் ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதியும், கலைப் பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 26 மற்றும் 27 ஆம் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கு 28 ஆம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

News June 19, 2024

கலந்தாய்வு தாமதம் பெற்றோர்கள் கோரிக்கை

image

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இரண்டு ஷிப்ட் மொத்தம் 4000 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தி முடித்தது போக இன்னும் 1364 இடங்கள் காலியாக உள்ளது. கலந்தாய்வு நடத்த தாமதம் ஏற்படும் சூழ்நிலையில் மாணவ, மாணவிகள் தனியார் கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளதால் உடனடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 19, 2024

ஜூன் மாதம் முழுவதும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதம் வாங்க தவறியவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

“ஜூன் மாதம் முழுவதும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும்”

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதம் வாங்க தவறியவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது

image

திருவண்ணாமலை மாவட்டம் கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டுக்கான மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

தி.மலை: 12 தாலுக்காக்களில் நாளை ஜமாபந்தி துவக்கம்

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (ஜூன் 19) தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை சனி, ஞாயிறு நீங்கலாக நடைபெற உள்ளது. இதில், வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

வந்தவாசி: 2ஆம் கட்ட தொல்லியல் பணி தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்திலிருந்து வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஆரணி எம்.பி., தரணிவேந்தன் , வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 18, 2024

தி.மலை: மக்கள் குறைதீர் முகாம் ரத்து

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் நாளை முதல் ஜமாபந்தி நடைபெறுவதால், திங்கள் கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை நாளை (ஜூன் 19) முதல் வரும் 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!