India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விதைப் பெருக்குத் திட்டத்தின் கீழ், நெல் விதை பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலரும், தி.மலை மாவட்ட கண்காணிப்பாளருமான எஸ்.மதுமதி ஆகியோர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே அள்ளிகொண்டாடபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வியாகுலமேரி, அண்ணம்மாள், லூர்து மேரி, வெண்சிலாஸ். இவர்களிடம 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதே பகுதியை சேர்ந்த புஷ்பலதா ராமு என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 336.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 66.2 மி.மீ, குறைந்த அளவாக ஜமுனாமுத்தூர் 11 மி.மீ மழை பதிவாகின. மேலும் சேத்பட்- 59.7, செங்கம்- 34.6, கீழ்பெண்ணாத்தூர்-28.6, செய்யாறு-24, கலசப்பாக்கம்-24, ஆரணி-20.6, வெம்பாக்கம-20, தி.மலை-16, வந்தவாசி-12 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
கலசபாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் கடலாடி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் கலைஞரின் வருமுன் காப்பீட்டு சிறப்பு மருத்துவ முகாம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியாக டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மு.பிரியதர்ஷினி பரந்தூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலாக தனி அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள இரா.பிரதீபன் திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மு.பிரியதர்ஷினி பரந்தூர் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னை தலைமைச் செயலாக தனி அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள இரா.பிரதீபன் திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு இன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளைஞர் நலம், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமிருந்து செங்கம், மகரிஷி மேல்நிலைப்பள்ளி விருதை பெற்றது. பள்ளி முதல்வர் வி.கார்த்திக் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.