India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.1,055 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று திருவண்ணாமலை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு நேற்று சட்டபேரவையில் அறிவித்தார். மேலும் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தருகிலும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் திருவண்ணாமலையில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர்களுக்கான இரண்டாம் பருவ இறுதித் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது.தொடர்ந்து ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 104 பயிற்சியாளர்கள் எழுதுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இன்று புதன்கிழமை போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை அந்த வளைதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், 600-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 28ஆம் தேதி 265 பேருந்துகளும், ஜூன் 29ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 28ஆம் தேதி 265 பேருந்துகளும், ஜூன் 29ஆம் தேதி 320 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் கிராம பகுதிகளில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுகோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமும் உள்ள பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் ஜூலை.5 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரை இன்று எம்.பியாக பதவியேற்றார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அண்ணாதுரை, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
ஆரணி அருகே உள்ள செங்கல் சூளையில் சேத்துப்பட்டு நமத்தோடு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (35), கலையரசி (29) தம்பதி குழந்தைகளுடன் வேலைசெய்து வந்தனர். நேற்று அதிகாலை செங்கல்சூளை அருகே பச்சையப்பன், கலையரசி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.