Tiruvannamalai

News June 29, 2024

புதிய மாநகரமாகும் திருவண்ணாமலை மாவட்டம்

image

திருவண்ணாமலை 30-9-1989 இருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நேற்று 4 புதிய மாநகராட்சிகள் உருவாவதற்கான மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதில் திருவண்ணாமலை புதிய மாநகராட்சியாக உருவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா சட்டபேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி உதயமாகிறது.

News June 29, 2024

துணை தேர்விற்கான தேர்வு மையம் தயார் செய்யும் பணி

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அரசு பள்ளிக்கல்வித் துறை நடத்திய பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணை தேர்வு வருகிற ஜூலை 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்விற்கான தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் முறையில் தீர்வு காண ஜூன் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை disatriuvannamalai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

சீருடைகள் தைக்கும் பணி: ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம், 2 ஆயிரத்து 174 பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 73 ஆயிரத்து 514 மாணவர்கள், 73 ஆயிரத்து 899 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 413 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 959 மதிப்பில் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்

News June 27, 2024

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 76 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினாா். தி.மலை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள், திருநம்பிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News June 27, 2024

தி.மலை: ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள்

image

தி.மலை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தி.மலை விவகார எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் விவகார எல்லை பகுதிகளில் 2024-25 ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்ய இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

தி.மலை ஆட்சியர் ஆய்வு

image

தி.மலை மாவட்டம், போளூர் கொம்மனந்தல் கிராமம் தரணி சர்க்கரைஆலை சில ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. விவசாயிகள் ஆலை நிர்வாகத்துடன் இணைந்து கரும்பு நடுவது, அறுவடை செய்வது, ஆலைக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

News June 26, 2024

60 போலீசார் பணியிட மாற்றம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் என 38 போலீசார் போளூர், செங்கம், மற்றும் செய்யாறு பகுதியில் உள்ள மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் என மொத்தம் 60 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News June 26, 2024

பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் இன்று (ஜூன்26) நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. காா்த்திகேயன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

News June 26, 2024

அண்ணாமலையார் கோவிலில் மூன்றாண்டுக்கான ஓதுவார் பயிற்சி

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம் ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டுக்கான சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி ஜூலை 19 மாலை 05.00 மணி. விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். வயது வரம்பு 13 வயது முதல் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

error: Content is protected !!