Tiruvannamalai

News March 23, 2025

உடல் சிதைந்து பெண் பலி 

image

செங்கம், போளூர் மாநில சாலையில் உள்ள நாகப்பாடி கிராமத்தில் அதிகாலை சாலையில் சென்ற சுமார் 50 வயது உடைய பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். சாலை விபத்தில் பலியான பெண் உடல் மீது வாகனங்கள் தொடர்ந்து மேலே ஏறி சென்றதால் பெண்ணின் உடல் சிதைந்து காணப்படுவதால் பெண்ணின் அடையாளத்தை புதுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 23, 2025

8 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்!

image

தி.மலை, செங்கம் அருகே 8 வயது சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சமையல்காரராக பணிபுரிந்து வரும் 45 வயதான முருகன் என்பவர் மது போதையில் அந்த சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின் சிறுவனின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே வந்த சிலர் முருகனை பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News March 23, 2025

திருவண்ணாமலை: திமுக அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.

image

திருவண்ணாமலை: உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து திமுக தலைமை அறிவிப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொது இடங்கள் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்றி 31.3.25க்குள் அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை.

News March 22, 2025

திருவண்ணாமலை ஜடேரி நாமகட்டி சிறப்புகள்

image

திருவண்ணாமலை அருகே ஜடேரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஜடேரி நாமகட்டி நீர் சார்ந்த சிலிக்கேட் தாதுக்களின் வளமான படிவிலிருந்து, களிமண் பதப்படுத்தப்பட்டு விரல் போன்ற குச்சிகளாக வடிவமைக்கப்படுகிறனர். ஜடேரி நாமகட்டி சிலைகள், மனிதர்கள் மற்றும் கோயில் யானைகளின் நெற்றிகளை அலங்கரிக்கப் பயன்படுகிறது.

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. எனவே செங்கல்பட்டில் கேன் தண்ணீர் வாங்கும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறியுறுத்தல். ஷேர்

News March 22, 2025

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.77¾ கோடி 

image

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.77% கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 ஆயிரத்து 850 பேருக்கு ரூ.34 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 சதவீததிற்கும் அதிகமான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

News March 22, 2025

கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

image

வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(45) கட்டிட மேஸ்திரி. இவர் வேலைக்கு சென்று விட்டு கிடைக்கும் கூலியை வைத்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் தினந்தோறும் மனைவியுடன் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் போதையில் சுரேஷ் வந்துள்ளார்.அப்போது அவரது மனைவி ஹேமாவதி தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News March 22, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

image

தி.மலை, சேத்துப்பட்டை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் பரத் (9) ,தேவேஷ் (4) என்ற இரண்டு சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாத நிலையில் சந்தேகத்தின் பேரில் உறவினர் தீயணைப்பு துறை மற்றும் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சிறுவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

News March 21, 2025

இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News March 21, 2025

மாணாக்கர்கள் கல்வியை தொடர்வதற்கு உதவித்தொகை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துஅரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம்வேளாண்மை, அரசின் ஒற்றைச் சாளர முறையில்(கவுன்சிலிங்) கல்லூரிச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!