India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (11.07.2024) காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் https://ssp.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் வரும் ஜுலை.31 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் எஸ்சி பிரிவின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கையில் கருப்பு கொடி ஏந்தி பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
வார விடுமுறையையொட்டி ஜூலை 13, 14 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தும் கோயம்பேட்டில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தி.மலை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜுலை 15 அன்று மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சி சான்று பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளோர் www.apprenticeshipindia.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டதில் 2024 ஆண்டிற்கான சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்கள் உரிய சுயவிவர குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் <
தி.மலை மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் இன்று அமைச்சர் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைக்கிறார். 15 துறைகளை ஒருங்கிணைத்து 124 இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ரூ.319 கூலி நிர்ணயம் செய்யப்பட்டு 6,10,261 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் 975 குளங்கள், 660 விளையாட்டு மைதானங்கள், 325 வரப்பு கட்டும் பணிகள் நடைபெறுவதால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடைபெற்று வரும் பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு
உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில்
உள்ள கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
ஆரணி, டவுன் கிளப் சார்பில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகள் வரும் 13, 14ஆம் தேதிகளில் ஆரணி கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆரணி எம்பி தரணிவேந்தன், தமிழக தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையேற்று போட்டியை துவக்கி வைக்கின்றனர். முதல் பரிசு ரூ.15,000, 2ம் பரிசு ரூ.12500, 3ம் பரிசு ரூ.10000, 4ம் பரிசு ரூ.7500, 5ம் பரிசு 5000 வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.