Tiruvannamalai

News July 19, 2024

தி.மலையை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அரசாணைக்கு ஒப்புதல்

image

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான மசோதாவை ஆளுநர் அவர்களுக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் தீர்மான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால் தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு தி.மலை நகராட்சி இன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

News July 19, 2024

ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு

image

திருவண்ணாமலையில் ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் நாளை தொடங்குவதால் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் 1600 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. சென்னையிலிருந்து 30 ஏசி பஸ்கள், 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து தி.மலைக்கு சிறப்பு ரயிலும் தி.மலையிலிருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News July 19, 2024

ரூ. 264.15 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

image

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.264.15 கோடியில் புதிய வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் 956 வகுப்பறைகளும், 12 ஆய்வக கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட கட்டிடங்களும் அடங்கும். இத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகமும் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயில புதிய வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

News July 19, 2024

ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜூலை மாதத்துக்கான குறைதீா் கூட்டம் இன்று (ஜூலை19) காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா்.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

பாம்பு கடியால் 7,300 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தி மட்டும் 630 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு 19.795 பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு இதன் சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

News July 19, 2024

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆய்வு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் தலைமையில்  நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த இக்கூட்டத்தில் அலோசனை மேற்கொள்ளப்பட்டது. இ‌தி‌ல் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 19, 2024

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில், மிதமான மழை செய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 18, 2024

திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸின் தள்ளுபடி

image

தி.மலை, திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆடி சிறப்பு தள்ளுபடியாக 2 சேலை/வேட்டி வாங்கினால் 1 சேலை/வேட்டி இலவசமாக வழங்கப்படும். குறிப்பிட்ட ரகங்களுக்கு 40% முதல் 70% தள்ளுபடி வழங்கப்படும். மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை ஆகஸ்ட் 16 வரை வழங்கப்படுமென முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை,தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு துணிகர செயல்கள் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியுடையவர்கள் http://awards.tn.gov.in-ல் பதிவு செய்யலாம். உரிய ஆவணங்கள், சுயவிவரத்துடன் மாவட்ட சமூகநல அலுவலர், ஆட்சியர் அலுவலகம், வேங்கிக்கால், தி.மலை என்ற முகவரியில் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!