India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக நடைபெறும். ஷேர் பண்ணுங்க! <<17338872>>தொடர்ச்சி<<>>
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 அன்று குடல்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஆகஸ்ட் 18 அன்று மீண்டும் மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 6,10,000 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 2,000 பக்தர்களுக்கு அறுபடை வீடுகள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி தேதி: 15.09.2025. மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in. திருவண்ணாமலை மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் நாளை ஆகஸ்ட் 8 முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் செங்கம், கலசப்பாக்கம்,வந்தவாசி, தெள்ளாறு, ஆரணி, மற்றும் மேற்கு ஆரணி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட நகர்ப்புறங்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப்பகுதியில் 15 துறைகள் 46 சேவைகள். முகாமில் மனு கொடுத்து பயன்பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 07) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குனத்தில் உள்ளது ஸ்ரீ யோக ராம பெருமாள் கோவில். 108 அபிமான தலங்களில் ஒன்றான இங்கு, லட்சுமி தாயாரின் அருளால் செல்வம், நலன் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கிறது. ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள இந்த தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயிலில் மந்தார வேண்டினால், வேண்டிய செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடன் நீங்கி செல்வம் சேரும் இந்த கோயிலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.
தேசிய குடற்புழு நீக்க நாள் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட உள்ளது. அதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 18 ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையை சேர்ந்த மோனிஷா (26), மோகன்ராஜ் (27) ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து 2023ல் கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். சமீபமாக மோகன்ராஜ் சரியாக பேசவில்லை எனக்கூறி, ஜூலை 27ல் அவர் வீட்டில் கேட்டபோது மோனிஷாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து (ஆகஸ்ட்-07) விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.