India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்க வேண்டுமாறு அறிவுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை, அண்ணாமலையார்
கோயிலில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய
மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அண்ணாமலையார் சன்னதி, மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் சாமி தரிசனம்
செய்தார் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து
மரியாதை செய்து அவருக்கு பிரசாதம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெறையூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம் சார்பில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வருங்கால வைப்பு நிதி சிறப்பு முகாம் ஜூலை 29 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5.45 வரை திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, ஸ்ரீகிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற் சங்கங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாமென வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரித்தேஷ் பக்வா தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற 30ஆம் தேதி அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சி மையத் தலைவர் அருளானந்தம் நேற்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 இடங்களில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 2 ஆயிரத்து 485 மனுக்களும், நகர்புறங்களில் நடைபெற்ற முகாம்களில் 968 மனுக்கள் என மொத்தமாக 3 ஆயிரத்து 453 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. காணிக்கை உண்டியலில் பக்தர்கள் சுமார் ரூ.3.46 கோடி பணம் , தங்கம் 305 கிராம் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள குளங்களை அளவீடு செய்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், சாணானந்தல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.