Tiruvannamalai

News September 5, 2024

செய்யாறு அரசு கல்லூரி மாணவர்கள் பயப்பட வேண்டாம்

image

தி.மலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆக.30ஆம் தேதி வேதியியல் துறை கட்டடத்தில் உள்ள மாணவியர் கழிவறையில் பாம்புகள் இருந்ததை கண்டு மாணவிகள் முதல்வரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, தீயணைப்பு துறையினரால் பாம்புகள் அனைத்தும் பிடிக்கப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் பாம்புகள் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

தி.மலையில் விவசாயிகள் பதிவு தொடக்கம்

image

தி.மலை மாவட்டத்தில் 24-25 சொர்ணவாரி பருவத்திற்கு முதல் கட்டமாக 34 மையங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 11.09.2024 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு 09.09.2024 முதல் துவங்கப்பட உள்ளது. விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

திருவண்ணாமலையில் ஆறு ஆசிரியர்களுக்கு விருது

image

திருவண்ணாமலையில் இந்தாண்டு ஆறு பேர் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர் . அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், ஆவூர் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை இராம தேவி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் செந்தில், அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் லட்சுமி காந்தன், நகராட்சி மேல்நிலை பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன், அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் கோ.சந்திர நாதன் ஆகியோர் தேர்வு.

News September 4, 2024

தி.மலையில் செப்டம்பர்- 20க்குள் விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளை தோ்வு செய்து தலா ரூ.15 ஆயிரம் பரிசு & பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோா் செப். 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

News September 4, 2024

தி.மலை ஆட்சியர் தகவல்

image

திருவண்ணாமலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இங்கி வரும் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் 20.9.2024 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் தொகையாக ரூ.2400 செலுத்த வேண்டும். ஏலத்தில் அதிக விலை கேட்பவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். வாகனங்களை வேலை நாட்களில் நேரில் பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 4, 2024

தி.மலையில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி

image

தி.மலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள் முற்றோதல் நேராய்வு நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்கள் வரும் 20.09.2024ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றும் அல்லது www.tamilvalarchithurai.tn.gov என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

தி.மலை அருணாசலேசுவரா் கோவிலுக்கு ரூ.73 கோடி

image

திருவண்ணாமலை அருணாசலேசுவரா் திருக்கோயிலில் ரூ.73 கோடியில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கிரிவலப் பாதையை மேம்படுத்துதல் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

News September 3, 2024

திருவண்ணாமலையில் விநாயகர் சிலை வாங்க கட்டுப்பாடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், அதனை பயன்படுத்தவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

News September 2, 2024

அண்ணாமலையார் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒரே நாளில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 2, 2024

தி.மலை: முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள்

image

திருவண்ணாமலையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பல்வேறு பிரிவினரும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுளள்து . தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்ய முடியும்.

error: Content is protected !!