Tiruvannamalai

News August 2, 2024

அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை

image

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட தோக்கவாடியில் கடந்த 2016ஆம் ஆண்டு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை நெடுஞ்சாலை துறையின் இடத்தில் அனுமதியின்றி வைத்தாக கூறி அகற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று (02-08-2024) அதே பகுதியில் அம்பேத்கர் சிலை அனுமதி பெற்று நிறுவப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 2, 2024

வறுமை, பட்டினி ஒழிப்பில் தமிழ்நாடு முன்னிலை

image

வந்தவாசி அருகே மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர், மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி உள்ளிட்ட 13 இலக்குகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்று கூறினார்.

News August 1, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 1, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் ஆய்வு

image

வந்தவாசி ஒன்றியம் சலுகை கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், கிரி உள்ளிட்டோர் இருந்தனர்.

News August 1, 2024

திருவண்ணாமலைக்கு கண்காணிப்பு அலுவலர் நியமனம்

image

11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவாண்ணாமலைக்கு மதுமதி என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள்

image

வார விடுமுறை மற்றும் ஆடி அமாவாசை நாள்களான வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனி 60 பேருந்துகள் என 120 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அம்சங்களை வலியுறுத்தி கண்டன முழுக்க கோஷங்கள் எழுப்பி இன்று போராட்டம் நடைபெற்றது.

News July 31, 2024

53 மாணவர்களுக்கு ரூ.2.60 கோடியில் கல்விக் கடன்கள்

image

திருவண்ணாமலையில் இந்தியன் வங்கி சாா்பில் கல்விக் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு கடனுதவிகள் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், உயா்கல்வி பயிலும் 53 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.60 கோடியில் கல்விக் கடன்கள் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான தொழில் கடன்களை ஆட்சியா் வழங்கினாா்

News July 31, 2024

அரசு கலைக் கல்லூரியில் 4-ம் கட்ட கவுன்சிலிங்

image

திருவண்ணாமலை அரசு கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் ஆக., 1,2 ஆகிய 2 நாட்கள் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான 4-ஆம் கட்ட கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. பிஎஸ்சி பட்டப் படிப்பில் கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் துறைகளுக்கு 1-ஆம் தேதியும், பி.காம், பிபிஏ பொருளியல் பி.ஏ வரலாறு, பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளுக்கு ஆக.2-இல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!