India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அலுவலக பயன்பாட்டிற்கான 24 புதிய வாகனங்களின் சாவிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேற்று துறை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 494.8 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் அதிகபட்சமாக தண்டராம்பட்டில்-108.4, குறைந்த அளவாக வெம்பாக்கம்-4.0 மேலும் செங்கம்-82.4 மி.மீ , வந்தவாசி-22மி.மீ , ஜமுனாமுத்தூர்-5மி.மீ , சேத்பட்-8.2மி.மீ , கீழ்பெண்ணாத்தூர்-55.6மி.மீ , போளூர் 70.0மி.மீ , கலசப்பாக்கம்-68.0மி.மீ , ஆரணி-7.0மி.மீ , திருவண்ணாமலை-64 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை படைத்த, நாட்டுப்புற கலைகளை தொழிலாக கொண்டுள்ள கலைஞர்கள் 2023-2024 ஆண்டிற்கான விருதுகள் பெற சுய விவரக் குறிப்பு,புகைப்படம், வயது சான்று, கலைத்துறை அனுபவ சான்று நகல்களுடன் உதவி இயக்குனர், கலை பண்பாட்டு துறை,சதாவரம், சின்ன காஞ்சிபுரம் -631502 என்ற முகவரிக்கு 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தி.மலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் 32 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் எ.வ வேலு, அமைச்சர் சிவசங்கர் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தரணி வேந்தன் எம்பி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி சரவணன், ஜோதி, அம்பேத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 487.2 மிலிமீட்டர் அளவு மழை பெய்துள்ளதாகவும் அதிகபட்சமாக செங்கம்-96.2 மி.மீ, குறைந்த அளவாக வந்தவாசி 8.0 மி.மீ. மேலும் தண்டராம்பட்டில் 51.6 மி.மீ ,ஜமுனாமுத்தூர் 38.0 மி.மீ ,சேத்பட் 35.6 மி.மீ , கீழ்பெண்ணாத்தூர் 60.6மி.மீ , செய்யாறு 48 , கலசப்பாக்கம் 45, ஆரணி 37 , வெம்பாக்கம் 15 , திருவண்ணாமலை 17.2 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(ஆக.09) கோவையில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நேற்று வியாழக்கிழமை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மி.மீ.மழை பதிவானது. திருவண்ணாமலையில் 14.5, செங்கத்தில் 6.8, போளூரில் 10, ஜமுனாமரத்தூரில் 2, கலசப்பாக்கத்தில் 16, ஆரணியில் 10.6, செய்யாற்றில் 12, வந்தவாசியில் 10.3, கீழ்பென்னாத்தூரில் 12.4, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Sorry, no posts matched your criteria.